புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு தப்பியோடிய தனியார் பஸ்ஸை தேடி விசாரணைகளை -மாங்குளம் பொலிஸார் 
. ஏ- 9 வீதியின் முருங்கன் ஆலயத்திற்கு அருகில் இச்சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் எங்கே போனது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், சாட்சியங்களை வழங்கியபோதிலும் பஸ் மாயமாக மறைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. பொலிசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக மேலும் அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட கான்ஸ்டபிள் போதையில் நின்றிருந்தாகவும், அவரே தற்செயலாகச் சென்று பஸ்சுடன் மோதுண்டதாகவும் சில பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

ad

ad