விசாரணைக்காக புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்!
இதையடுத்து அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டு வருகிறார். மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகராஜா என்பவரிடம், கார் மோசடி செய்த வழக்கிலும், அதன் தொடர்ச்சியாக கேகே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரிடம் ரூபாய் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கிலும் புவனேஷ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நடிகை புவனேஷ்வரி சைதாபேட்டை நீதிமன்றத்தில் 06.12.2012 அன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
புவனேஷ்வரி வழக்கறிஞர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அரசு தரப்பில் கேட்கப்பட்டது. எங்களது தரப்பில் போலீஸ் காவல் விசாரிக்க தேவையில்லை என்ற வாதிடப்பட்டது. இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார் நீதிபதி என்று தெரிவித்தார்.
புவனேஷ்வரியை காவலில் எடுத்து விசாரிக்கும்போது அவருடன் இரண்டு வழக்கறிஞர்களும் இருக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து போலீசார் புவனேஷ்வரியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள