புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012



சிறையில் புவனேஷ்வரியை நன்றாக கவனித்துக்கொள்ளும்படி சொன்ன காவல்துறை அதிகாரி யார்? தீவிர விசாரணை
சென்னை நீலாங்கரையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சினிமா பார்க்க சென்றபோது ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டார் என நடிகை புவனேஷ்வரி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த 27.11.2012 அன்று நடிகை புவனேஷ்வரி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் அவர் அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டார். மேலும் சில புகார்களின் பேரில் அவர் மீது வழக்குகள் பாயும் நிலை உள்ளது என்றும், எனவே புவனேஷ்வரி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயும் பட்சத்தில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நடிகை புவனேஷ்வரி சில காவல்துறை அதிகாரிகளின் பெயரை கூறி மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால்தான் சென்னை மாநகர காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களில் புவனேஷ்வரி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
புவனேஷ்வரிக்கு சில காவல்துறை அதிகாரிகள் துணை போயிருப்பதாக கூறப்படுவதால், அவர்கள் யார் யார் என்ற விசாரணையும் தீவிரம் அடைந்திருக்கிறது. இவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி சிறை அதிகாரிகளுக்கே தொடர்பு கொண்டு நடிகை புவனேஷ்வரியை அவரது மனம் புன்படும்படி நடந்து கொள்ளாமல் நன்றாக கவனித்துக்கொள்ளும்படியும் பரிந்துரை செய்துள்ளார் என்றும், இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ad

ad