புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை -சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் 
வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை அரசியல் சாசனத்தை மீறி செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும்.
வட மாகாணசபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 1ம் மற்றும் 4ம் தீர்மானங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் புலிகளின் சார்பில் பிரசாரம் செய்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை கோரி வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஏழு சட்டத்தரணிகள் சங்கங்கள் இணைந்துள்ள இந்த ஒன்றியம் கொழும்பில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.
இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி கபில கமகே, மனித உரிமை தொடர்பான விடயங்கள் மாகாண சபை சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதனால் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad