புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

ஜூரிச் செஸ்: ஆனந்த் - கருணா ஆட்டம் டிரா

ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இத்தாலியின் ஃபேபியானோ கருணாவுடனான ஜூரிச் செஸ் போட்டியின் 3-வது சுற்றை டிரா செய்தார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இரண்டு சுற்றில்
ஆனந்த் தோல்வியடைந்தார். இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் ஆனந்த் சுதாரித்தார்.
கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்த சுற்றில் ஆனந்த் கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார். "ஸ்லவ் டிஃபன்ஸ்' முறையில் ஆட்டத்தைத் தொடங்கிய அவர், கருணாவுக்கு நெருக்கடி கொடுத்தார். முடிவில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் ஒரு புள்ளி பெற்று தனது புள்ளிக் கணக்கைத் தொடங்கினார் ஆனந்த்.
காரல்ùஸன் ஆதிக்கம்: அமெரிக்காவின் நகமுரா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்ùஸன் மோதிய ஆட்டத்தில் கார்ல்ùஸன் வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் கார்ல்ùஸன் தோற்பது போல இருந்தது. பின்னர், கார்ல்ùஸன் சுதாரித்துக் கொண்டதால் தோல்வியில் இருந்து தப்பினார். ஆர்மேனியாவின் அரோனியன், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்ட் ஆகியோருக்கு இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.
3 சுற்றுக்களின் முடிவில் கார்ல்ùஸன் 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அரோனியன் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நகமுரா மற்றும் கருணா ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். கெல்ஃபாண்ட் 2 புள்ளிகளுடனும், ஆனந்த் ஒரு புள்ளியுடனும் முறையே 5 மற்றும் 6-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கிளாசிக்கல் மற்றும் ரேபிட் ஆகிய முறைகளில் நடைபெறும் இந்த போட்டியின் முடிவில், இரண்டிலும் முதலிடம் பெறுபவர் பட்டம் வெல்வார். இந்த போட்டியில் முன்னணியில் உள்ள 6 வீரர்கள் மட்டுமே பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad