மஹியங்கனை – பதுளை வீதியில் பாரிய மண்சரிவு
தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மஹியங்கனை – பதுளை வீதியில் துன்ஹிந்த வளைவு பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாதையில் இருந்து மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எளுவங்குளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மன்னார்- புத்தளம் பழைய வீதி மூடப்பட்டுள்ளது.