உள்ளுராட்சி ஆணையாளரால் மானியம் வழங்க அங்கிகரிக்கப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கும் நிகழ்வு இன்று
காலை வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வவுனியா நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை, வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய பிரதேசங்களுக்குட்பட்ட 120 சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்கி வைக்கப்பட்டது. இயங்கா நிலையிலுள்ள சனசமூக நிலையங்களுக்கு மானியம் வழங்க அங்கீகரம் கிடைக்கவி;லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம். தியாகராசா, எம்.பி. நட்ராஜா, ஜி.ரி. லிங்கநாதன், தர்மபால செனவிரத்னா, ஜயதிலகா மற்றும் பிராந்திய உள்@ராட்சி உதவி ஆணையாளர் பி.எம். அசங்க காஞ்சன அகியோர் கலந்த கொண்டனர்கள்.