தமிழ் மக்கள் பேரவையினரின் ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கு நாங்கள் செவிசாய்க்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று முதல்வர் விக்கினேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக மாவை சேனாதிராசாவிடம் ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.