தற்போதய காலகட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளை உருவாக்கினாலும் அது கிழக்கு
மாகாணத்திற்கு சாபக்கேடே என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமது அலுவலகத்தில் தற்போதய புதிய அமைப்பு யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்டமை தொடர்பாக ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கை யில்,
தற்போதயநிலையில் ஒவ்வொரு தமிழ்மகனும் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தகூடாது.தே ர்தலில் இம்முறை நான் வெற்றிபெறவில்லை என்பதற்காக அல்லது தேசியபட்டியல்உறுப்புரி மை சம்பந்தர் எனக்கு தரவில்லை என்பதற்காக அல்லது ஒருவர் இருவர் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதற்காக நான் வேறு அமைப்புக்களில் இணைவதோ அல்லது தமிழ்தேசியகூட்டமைப்புக் கு எதிராகசெயல்படுவதோ எனது நோக்கமில்லை.
குறிப்பாக கிழக்கு மாகாணமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.வடகிழக் குதாயகம் என்பது மறுக்க முடியா உண்மை அதில் வடமாகா ணத்தில் உள்ள தற்போதய நிலைகளுடன் கிழக்கு மாகாணத்தை புவியியல் ரீதியாகவும் இனப்பரம்பல் ரீதியாகவும் ஒப்பிடமுடியாது.
2009க்கு முன்னுள்ள நிலைமையை விடவும் கிழக்கு மாகாணம் சிங்கள மக்களாலும் இஸ்லாமிய அரசியல்வாதிகளாலும் பாரதூரமாக திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள் சிலு சிலுப்புகள் இன்றி பறிபோய்க்கொண்டிருக்கின் றது.
வேலைவாய்ப்பில் தமிழர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமான தமிழர்கள் நிறைந்த மாவட்டத்தில் மாவட்ட இணைத்தலைவராக மூன்று முஸ்லிம் உறுப்பினர்க ளும் ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டநிலை யில் இன்னும் பல ஆபத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும்.
தமிழ்தேசியகூட்டமைப்பு எடுக்கும் அரசியல் தீர்வு விடயத்திற்கு குறிப்பாக கிழக்கில்உள்ள அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும். அதை விடுத்து இன்னும் ஒரு மாற்றுத்தலைமைக்கு பின்னால் செல்வது கிழக்குத்தமிழர்களாகிய நாம் எமது தலை யில் நாமே மண்ணை போடுவதற்கு ஒப்பாகும்.
வடமாகாணத்தை பொறுத்த மட்டில் இன்னும் பத்துவருடம் அரசியல்தீர்வு இல்லாமல் இப்படியே இருந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில்பாதிப்புக்கள் இல்லை. இதனால் யாரும் நான் பிரதேசவாதம் பேசுவதாக நினைத்தால் அதுஅவர்கள் மடமைத்தனமும் கிழக்குமாகாணம் தொடர்பான சரியான விளக்கம் இல்லாதவர்களேயாகும்.
கடந்தமுப்பது வருடஅகிம்சைப் போராட்டகால அரசியலை தலைமையேற்று நடத்திய தந்தை செல் வாவாக இருக்கலாம், அதன்பின் ஆயுதப்போரா ட்டத்தை முப்பது வருடம் தலைமையேற்று வழி நடத்திய தலைவர் பிரபாகரனாக இருக்கலாம் பல கட்டங்களில் அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை விட்டு வடமாகாணத்தை மட்டும் எடுத்து தனியாக ஆட்சி செய்யுமாறு அந்தந்த காலக்கட்டங்களில் இருந்த சிங்கள தலைவர்கள் கேட்டபோதும் தாம்கிழக்கு மாகாணத்தை விட்டு எந்த தீர்வையும்பெறமாட்டோம் என உறுதியாக கூறி இருந்தனர்.
எப்போதும் வடக்கில் இருந்து கிழக்கு மாகாணம் பிரியக்கூடாது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் எமது தலைவர்கள் செயல்பட்டனர்.
தற்போது இராஜதந்திர அரசியல் தலைமையை ஏற்றுள்ள சம்பந்தனும் வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வில் இருந்து தடம்மாறவில்லை. எதிர்வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31க்குள் அரசியல் தீர்வு கிடைக்கும் என உறுதியுடன் தமது செயல்பாட்டை முன் எடுக்கும் போது அதற்கு மாற்றீடாக வேறு ஒரு பெயரில்அமைப்புக்கள் ஏற்படுத்துவது இன்னும் காலத்தை இழுத்தடிக்குமே தவிர அதனால் அடையும் லாபம் அரசாங்கத்திற்கு லாபமாகமட்டும் இருக்கும் எமக்கு எந்த நன்மையும் ஏற்படாது.
காலம் கடக்கும்போது நில அபகரிப்பும் வேலைவாய்ப்பின்மை, கலாசாரசீர்கேடு, திட்டமிட்டகுடியேற்றம் எல்லாமே வட மாகாணத்தைவிடவும் கிழ க்கு மாகாணத்தில் சத்தமின்றி நிறைவேறும். இந்த யதார்த்தத்தை எந்தளவுக்கு விளங்கிக் கொள்வார்கள் எனத் தெரியாது. ஆனால் வடமாகாண முதல்வர். விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் இந்த இக்கட்டான உண்மைகளை விளங்கி இருவரும் சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஏற்பாட்டில் ஒரு மனம் திறந்த பேச்சு வார்த்தையை நடத்தி இருப்பது காலத்தின் தேவை யாகும் என்றார்.