-
29 ஜூன், 2013
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் 2011ம் ஆண்டு விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகவில் இணைந்த பரிதி இளம்வழுதி,
பொன்னுசாமிக்கு பொறுப்பு
முன்னாள் அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி ஆகியோர் 28.06.2013 வெள்ளிக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பொன்னுசாமியும் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இதுகுறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய மந்திரி இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)