புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!
தமிழ்நாடு, அகதி முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்தவர் அழகுராஜா (வயது 32).
இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இவருக்கும், இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் புதன்கிழமையன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அழகுராஜா மண்ணெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீயிட்டு கொண்டார்.
வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ad

ad