புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013


தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்!- அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள்!
மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், திணிக்கப்பட்ட தேர்தல் என்ற போதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த் தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்ல வைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல்துறை, 
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
19/09/ 2013.

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தேர்தலைப் பயன்படுத்துவோம்
அன்பான தமிழ்பேசும் மக்களே!
எம்மினம் தாங்கொணா சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீண்டு வருவதற்குள் அடுத்தடுத்து பாரிய அழுத்தங்களை எம்மக்கள் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். அவ்வகையில் அண்மையில் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட ஓர் அழுத்தமே இந்த வடமாகாணசபைத் தேர்தல்.
மாகாணசபை முறைமை ஒருபோதும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வாகாது என்பது மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட அமையாது என்பதில் தமிழ்த்தேசியத்தில் ஆழமான பற்றுக்கொண்டோர் அனைவரும் தெளிவாகவே உள்ளனர். இருந்தபோதும் எமது மக்கள் விரும்பாத ஒரு தேர்தல் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்குமுதவாத ஓர் அரைகுறைத் தீர்வுமுறையான மாகாணசபையைக் கைப்பற்றுவதன்மூலம் தமிழரின் உரிமைப் போராட்டத்தில் பெரிதாக எதையும் பெற்றுவிடப் போவதில்லை. ஆனாலும் திணிக்கப்பட்ட தேர்தலை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் எமது தமிழினம் உள்ளது.
இத்தேர்தல் முடிவு தமிழரின் உரிமைப் போராட்டத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது என்ற கண்ணோட்டத்தில் தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் இருக்கின்றபோது நிலைமை படிப்படியாக மாற்றமடைந்து வருவதை உணர முடிகின்றது. இத்தேர்தல் பெறுபேறுகள் தமக்குச் சாதகமாக வருமிடத்து, தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்மக்கள் தூக்கியெறிந்து விட்டார்கள் என்ற பரப்புரையை முடுக்கிவிட அரசு தீவிரமாக முயல்கின்றது. எப்பாடுபட்டாவது தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான சக்திகளைத் தோற்கடித்து தனது பரப்புரையை உலகமட்டத்தில் விரிவாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றது. அதற்காக முடிந்தவரை முயன்றுகொண்டுள்ளது.
இந்தத் தருணத்தில் தமிழ்மக்கள் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டியது வரலாற்றுக்கடமை. எமது விருப்பமின்றி எம்மீது திணிக்கப்பட்ட இத்தேர்தலைச் சரியான முறையில் எதிர்கொண்டு எதிரியின் கபட நோக்கத்தை முறியடிக்க வேண்டிய கடப்பாடு தமிழர் எல்லோருக்குமுள்ளது.
எமது இனம் விரும்பாத வகையில் எம்மீது ஆயுத வன்முறை திணிக்கப்பட்டபோது தவிர்க்க முடியாமலேயே நாமும் ஆயுதமேந்திப் போராடினோம். இன்று சிறிலங்கா அரசானது எம்மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு புதியமுறையில் அரசியல் பொறிகளை வைத்து வருகின்றது. இதிலொன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல். இதையும் தேர்தல் வழியிலேயே முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் எமது மக்கள் இருக்கின்றார்கள்.
எனவே, மாகாணசபை எமக்குரிய தீர்வல்ல என்றபோதும், எமது விருப்பின்றி திணிக்கப்பட்ட தேர்தல் என்றபோதும், தவிர்க்கவியலாமல் வரலாறு எம்மீது சுமத்திவிட்ட பணியை ஏற்று, தமிழ்த்தேசியப் போராட்டம் வீழ்ந்து விடவில்லையென்பதை உலகுக்குப் பறைசாற்ற சரியானவர்களை வெல்லவைத்து தமது தேசியக் கடமையைச் செய்ய முன்வருமாறு அனைத்துத் தாயக உறவுகளையும் கேட்டுக் கொள்கின்றோம். அதேவேளை, மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாயிருந்து தாயகக்கோட்பாட்டில் உறுதியாக நின்று பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்பான மக்களே!
“போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்ட இலட்சியம் என்றும் மாறாது’ என்ற எமது தேசியத் தலைவரின் எண்ணத்துக்கமைய இன்றைய காலச்சூழலில் எமது அமைப்பானது உலக ஒழுங்கிற்கு ஒத்திசைவான ஒரு போராட்டப் பயணத்தை மேற்கொள்கின்றது. அந்த வகையில் எமது அமைப்பின் அரசியல்துறையானது எமது விடுதலைப் போராட்டத்துக்கான பணியை புதிய புறச்சூழலுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லும்.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்று முழங்கிய தியாகி திலீபனின் நினைவு நாட்களில் நடைபெறும் இந்த மாகாணசபைத் தேர்தல் பொறியை மக்களின் துணையுடன் வென்றெடுப்போம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ம.அன்புமாறன்,
பொறுப்பாளர்,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
தமிழ் மக்கள் முழு அளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியத்துக்கு வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி! தமிழர் பிரச்சினை சர்வதேசத்தை நோக்கி வேகமாக செல்லும்: அரசியல் விமர்சகர்கள்
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முடிவுகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் எதிகாலம் பற்றிய எதிர்வுகூறலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரபாகரன் ஒரு விடுதலை போராட்ட வீரர்! தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு தேவை: விக்னேஸ்வரன்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
தமிழ்த் தேசிய அணியே தேர்தலில் வெல்லும்: கருத்துக் கணிப்பு-BBC
இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை
அனந்தி சசிதரன் (எழிலன்) வீட்டின் மீதான தாக்குதலுக்கு த.தே.மக்கள் முன்னணி கண்டனம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 
தமிழகத்தில் பெண்ணொருவர் கொலை: இலங்கை அகதி கைது
தமிழகத்தின் கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் ஆலாந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை அகதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழர் பிரதேசம் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது: அனைத்துலக ஈழத் தமிழர் அவை
சிங்கள யாப்பின் கீழ் இயங்கும் எந்தவொரு கட்டமைப்பும் சனநாயக முறைப்படி தமிழ் மக்களிற்கு தீர்வொன்றையும் தரப்போவதில்லை. இதன் அடிப்படையில் மாகாணசபை தமிழர்களிற்கான தீர்வாக அமையாது.
அனந்தி மீதான தாக்குதலை இராணுவமே மேற்கொண்டது!- கபேயின் தேசிய அமைப்பாளர் அதிர்ச்சித் தகவல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான திருமதி அனந்தியின் வீட்டிற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சிறிலங்கா சுதந்திர கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் மன் மதலீலைகள் அம்பலம்.

கீதாஞ்சலி நகுலேஸ்வரனின் திடுக்கிடும் உண்மைச்சம்பவம் ஒலிப்பதிவு ஆதாரத்துடன்.  கீதாஞ்சலியின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு விபரங்களுடன் இவர் பற்றிய தொடரினை விரிவாகத்தரவுள்ளோம்.
2009ம் ஆண்டிற்குப்பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தங்களின் சுயநலத்துக்காவும்,சலுகைகளுக்காகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகவும்,தமிழ்த்தேசியக்கூட்டமைபுக்கு எதிராகவும் அறிக்கை விடுவதும் ஐ.நா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் ஆட்களைச்சேர்த்து ஐ.நாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைச்

நாக்கை துருத்தி, கையை ஓங்கிய விஜயகாந்த் :
 ஐகோர்ட் களேபரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 13–ந்தேதி கேப்டன் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘பத்திரிகைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளம்பரங்கள் கொடுத்து மக்கள்
தேமுதிக, மதிமுவை பாஜக கூட்டணிக்கு அழைக்கும்முயற்சிக்கு ஆதரவளிக்கிறோம்: இல.கணேசன்

 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல. கணேசன் 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,
ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்றார் ஜெ., :புதுவை சிறைக்கைதிகள்  திருச்சி சிறைக்கு மாற்றம்

புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 26 கைதிகள் நாளை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தம்புள்ளை அம்மன் கோவிலிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும்!- இனாமலுவ தேரர்
தம்­புள்ளை அம்மன் கோவில் அமைந்­துள்ள இடத்தில் குளம் ஒன்று நிர்­மா­ணிக்கும் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டு­  வரும் நிலையில் தம்­புள்ளை விகா­ரா­தி­பதி இனாம­லுவ தேர­ரினால் அப்­ப­கு­தி­யி­லுள்ள மக்கள் இன்று வெள்­ளிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளி­யே­ற வேண்டு­மென காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. 
இலங்கையில் நடைபெற்ற கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி ஐ.நாவுக்கு அறிக்கை
இலங்கையில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையான 5 வருட காலத்தில் நடந்த கொலைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஐக்கிய
இராணுவம் நிறுத்திய வேட்பாளர்களுடன் ஹத்துருசிங்க வல்லிபுரக் கோயிலில் வழிபாடு!- ஆதாரப் புகைப்படங்கள் கசிந்தன
யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் இராணுவ வேட்பாளர்கள், வடமராட்சியிலுள்ள  வல்லிபுரக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியில் இராணுவத்தினரால் சில வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனந்தி வீட்டில் நடந்த தாக்குதலுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை!- இராணுவப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் அனந்தி (எழிலன்) சசிதரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் புலிகளுக்கு ஆயுதங்களை விற்றுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. குறிப்பாக ஐந்து நாடுகள் இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு !!!


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.

திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் ஒரு பெண் என்றும் பார்க்காமல் இப்படியான தாக்குதல் நடபெற்றமையானது, வடகிழக்கில் போரினால் கணவரை இழந்த 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், 50ஆயிரம் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு அற்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இச்சம்பவங்கள் மூலம் ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. அது என்னவெனில் தேர்தல் மூலம் சிறிலங்காவில் நல்லிணக்கமும், சமாதனமும் ஏற்படும் என்று நினைப்பவர்களுக்கு எப்பவுமே தமிழனும் சிங்களவனும் ஒன்றாக வாழ முடியாது என்பதையும், அப்படி வாழ்ந்தால் தமிழன் சிங்களவனுக்கு அடிமையாக மட்டுமே வாழமுடியும் என்பதையும், உரிமைக்கு குரல் கொடுத்தால் இதுதான் விளைவு என்பதை தமிழருக்கும் சர்வதேசத்துக்கும் சொல்லாமல் செல்லியுள்ளது சிங்கள அரசு.

எனவே எனியும் இலங்கையில் ஜனநாயகம் மலரும், உரிமைகளை சிங்கள அரசாங்கம் தமிழருக்கு உரிமையை பகிர்ந்து கொடுக்கும் என்ற எண்ணத்தினை கைவிட்டு அமெரிக்க உடனடியாக நேரடியாக ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும்.

விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஒருவகையில் சிங்கள அரசாங்கத்திற்கு உதவிய அமெரிக்கா, புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.அனந்தி சசிதரன் மீது இனவாதத் தாக்குதல்: ஈழத்தமிழரை அமெரிக்கா உடனே காப்பாற்ற வேண்டும்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு


வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், வீட்டு சின்னத்தில் இலக்கம் 1 போட்டியிடும் திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) அவர்கள் மீது இன்று அதிகாலை 12.20 மணியளவில் சிங்கள இராணுவம் மற்றும் ஈபிடிபி ஆகியோர் இணைந்து கொலை வெறித்தாக்குதலை மேற்கொண்டார்கள்.

இது திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) அவர்கள் மீதான தாக்குதல் என்று மட்டும் பாராமல், எமது உரிமைக்காக குரல் கொடுத்தால் இப்படித்தான் தாக்குவோம் என்று சிங்கள அரசாங்கம் தமிழருக்கு மீண்டும் கூறியுள்ள செய்தியாகும்.

ad

ad