புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013


நாக்கை துருத்தி, கையை ஓங்கிய விஜயகாந்த் :
 ஐகோர்ட் களேபரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 13–ந்தேதி கேப்டன் டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது ‘‘பத்திரிகைகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா விளம்பரங்கள் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை கோடிக் கணக்கில் நாசம் செய்கிறார்’’ என்று கூறி இருந்தார்.

இதையடுத்து விஜயகாந்த் மீது முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜயகாந்துக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். 

கோர்ட் உள்ளே சென்ற விஜயகாந்த், தொண்டர்களை பார்த்து கும்பிடுவது மாதிரி இரு கைகளையும் தலைக்கு மேலே குவித்து இரண்டு முறை கும்பிடு போட்டிருக்கிறார்.

அவர் கோர்ட்டை விட்டு வெளியே வந்தபோது, கூட்டம் முண்டியடுத்தது.  இதில் ஆவேசப்பட்ட விஜயகாந்த், நாக்கை துருத்தி, கையை ஓங்கி ஆவேசத்தை காட்டினார்.

முன்னதாக விஜயகாந்துடன் தேமுதிக மகளிர் அணியினரும் கோர்ட்டுக்குள் நுழைந்தனர்.  போலீசார் அவர்களை தடுத்து அனுமதி சீட்டு இருந்தால்தான் இங்கே நிற்க முடியும் என்று கூற, எங்களிடம் இருக்கிறதே என்று அனுமதி சீட்டை தலைக்கு மேலே உயர்த்தி காட்டினார்கள்.

ad

ad