காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என்ற கோரிக்கை, கடந்த பல வாரங்களாகவே, தமிழகத்தில் சூட்டைக் கிளப்பிவருகிறது!
கடந்தவாரத்தில், சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டன. இது தொடர்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த 8 பேரை கைதுசெய்துள்ளது, போலீஸ்.