புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2014


பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் தேசத்தை கட்டியெழுப்ப முடியாது எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்க நாம் தயார்

‘தேசத்துக்கு மகுடம்’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சி ஆரம்ப வைபவத்தில் ஜனாதிபதி


பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்காமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் பல சவால்களை சந்தித்துள்ளோம். எதிர்காலத்திலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நாட்டை இன்னும் 20 வருடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பமே ஆட்சி புரியும்


ராஜபக்ஷ குடும்பம் இன்னும் 20 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சிபுரியும். ஐ. தே. க. எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும் இதனை மாற்ற முடியாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாய் மூல விடைக்காக பி. ஹெரிசன் எம். பி. எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு அழைப்பு

அமைச்சர் டளஸ் நியூயோர்க்கில் பான்கீ மூனுடன் பேச்சு
கொழும்பில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் பங்குபற்ற வருமாறு ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பிதழுடன் நியூயோர்க் சென்றுள்ள இளைஞர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, ஐ. நா.

அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4 நாடுகள்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சாதனை படைத்த பீகார்
உலகிலேயே 20 கி.மீ பரப்பளவில் இலவச வைஃபை மண்டலத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளது இந்தியாவின் பீகார் மாநிலம்.
இந்தியாவின் பின்தங்கிய மாநிலம் என்று பெயர் பெற்றிருந்த பீகார் தற்போது ஹைடெக் சாதனை படைத்துள்ளது.

7 பேரின் விடுதலை அறிவிப்பின் எதிரொலி: டெல்லியில் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை நேற்று சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார்.

கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்கக் கூடாது: ராஜீவ் காந்தியுடன் பலியானோரின் குடும்பத்தினர் கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குண்டுவெடிப்பில் அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கையில் சட்டமீறல் இல்லை! மத்திய அரசின் மனுவுக்கு எதிராக வெற்றி கிடைக்கும்: ராம் ஜெத்மலானி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கையில் சட்ட மீறல் எதுவும் இல்லை என்று இவ்வழக்கில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். 

ராஜபக்சவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தால் ஏற்றுக் கொள்வார்களா?- 3 பேரின் விடுதலைக்கு எதிராக அறிக்கை
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், 7 பேரின் விடுதலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

21 பிப்., 2014


முடிந்தால் பாருங்கள்;எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்;இதை சவாலாக விடுக்கிறேன் : ஞானதேசிகன் பேச்சு
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

7 பேர்  விடுதலையை கண்டித்துஇளைஞர் காங்கிரசார் உண்ணாவிரதம்
 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதையடுத்து குற்றவாளிகளை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

ன்னையில் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழா ”மன்றல் 2014” 
“மன்றல் 2014” என்னும் தமிழகத்தின் மாபெரும் ஜாதிமறுப்பு இணைதேடல் பெருவிழாவினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சென்னை பெரியார் திடலில் எதிர்வரும் 23.2.2014 ஞாயிறு அன்று நடத்திடவுள்ளது.
இதுதொடர்பாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் இயக்குநர் திருமகள் கூறியிருப்பதாவது,

தேர்தலில் இணைந்து பணியாற்ற அழைப்பு! ஜெயலலிதாவுடன் பண்ருட்டி வேல்முருகன் சந்திப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இச்சந்திப்பு பாராளுமன்றத் தேர்தலையொட்டிதான் என்று கூறப்படுகிறது. 
வேல்முருகன், தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவை திமுக தரப்பு சந்தித்தது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தரப்பும் சந்தித்தது. அப்போது தேர்தலில் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பலனை நீங்கள் பெறலாம் என்று ஓ.பி.எஸ். கூறியுள்ளார். இரண்டு இடம் அல்லது கடலூர் தொகுதி மட்டுமாவது என்று கேட்டவர்களிடம், அதெற்கெல்லாம் உத்திரவாதம் கொடுக்க முடியாது, தற்போது இணைந்து பணியாற்றினால் சட்டமன்றத் தேர்தலில் அதற்கான பலனை அனுபவிக்கலாம் என்று மீண்டும் ஓ.பி.எஸ். கூறினாராம். இதையடுத்தே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதம நீதியரசருக்கு சார்பான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்தது
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக மேன்முறையீடடு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
ஓய்வு பெற்ற பின் சொந்த வீட்டிற்கு திரும்பியுள்ளேன்:
 பண்ருட்டி ராமச்சத்திரன்

 தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில்  இணைந்தார்.
சிகப்பு ரோஜாக்கள், நீங்கள் கேட்டவை உள்ளிட்ட
 200 தமிழ் திரைப்படங்களை டி.வி.டி.யில் வெளியிட  இடைக்கால தடை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கே.பி.ரவிசந்திரன். இவர், சென்னை
டோனி விலகல்! அணித்தலைவரான கோஹ்லி
காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி விலகியுள்ளார்.
மனித உரிமை குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு - கிரியெல்ல கடிதம்
மனித உரிமைகள் சம்பந்தமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்கள் தொடர்பாக விவாதிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு
ஜெயலலிதா முடிவை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது? - சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன்-பி.பி.சி 

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று இந்திய அரசின் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் கே வி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ad

ad