லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில்
பதவியில் இருக்கும் காலம் வரை மத்திய அரசுக்கு ரகசியமாக அறிக்கை அனுப்புவதுதான் கவர்னரின் பணி. பதவி நீக்கப்பட்டால் ஓப்பனாகவே பேட்டி கொடுத்து அதே மத்திய அரசை விமர்சிக்க முடியும் எனக் காட்டி யிருக்கிறார் புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வீரேந்திர கட்டாரியா.
புதனன்று (ஜூலை 16) பத்திரிகையாளர்களை சந்தித்த கட்டாரியா, ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுமதித்து நான் ஒப்புதல் கொடுத்ததுதான் என்னை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம். தமிழக அரசு தலைமைச்செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் இருவரும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யிடம் சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு போக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட, அதனடிப்படையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி., புதுச்சேரி தலைமைச் செயலாளரையும், சட்டத்துறைச் செயலாளரையும் கேட்டுக்கொண்டார். அதையடுத்து புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் மூவரும் மேல்முறையீடு சம்பந்தமான ஃபைலை என்னிடம் அனுப்பினார்கள்; 302 செக்ஷன் கேஸ் என்று பொதுவாகச் சொன்னார்கள். நானும் வழக்கப்படி கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திவிட்டார்கள்.
நான் இங்கு பதவியேற்றதிலிருந்து புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை கவனித்து, ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இங்கு நிலவும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் என்னையும் சேர்க்க தலைமைச் செயலாளர் முயற்சித்தார். நான் கண்டித்து அனுப்பிவிட்டேன். இதனால் என் மீது கடுப்பாக இருந்தவர்கள், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மேல்முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்த பின் நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார்கள். எனது பதவி நீக்கம் என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. நான் ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ.மூலமாக எனது பதவி நீக்கத்துக்கான காரணத்தை தெரிந்தே தீர்வேன்'' என்றார் பத்திரிகை யாளர்களிடம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகு, எல்லாரின் கவனத்தையும் டெல்டா மாவட்டங்களின் பக்கம் ஈர்த்திருக்கிறது மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு!
""ஹலோ தலைவரே.. … பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் கடந்த மூணு வருசமா நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத ஜெயலலிதா, இந்த முறை காமராஜர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்காரே?''
அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் வீட்டில் தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டதும் அங்கேயே பெண் கவுன்சிலர் தூக்கில் தொங்கியதும், அரசியல் வட்டாரத்தில் திகில் கலந்த பேச்சாக இருக்கிறது.
நாற்பதுக்கு நாற்பது எனச் சொல்லி 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகும், அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் மாற்றம், பிற நிர்வாகிகள் மாற்றம் ஆகியவை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன
கருப்பு பணம் மீட்பு குறித்து நேரில் ஆலோசனை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு சுவிட்சர்லாந்து ஏற்பாடு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.
காரைநகர் சிறுமி வன்புணர்வுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 கடற்படை சிப்பாய்களையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசிய பயணிகள் விமானம் MH17 உக்ரைன் நாட்டில் தாக்கி வீழ்த்தப்பட்டமைக்கு ரஷ்யா உதவியாக இருந்தமைக்கான பெரும் ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.