புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014

இலங்கையின் எப்பகுதியில் இருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கலாமாம்; கூறுகிறார் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி 
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று இளம்பெண்களை இராணுவத்திலும், பண்ணை வேலையிலும் இணையுமாறு வற்புறுத்தி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதியின்  ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவத்தில் யாரையும் கட்டாயமாக இணைத்துகொள்ள வேண்டிய தேவை இல்லை. அவ்வாறு யாரும்  வற்புறுத்தப்பட்டிருந்தால் என்னிடம் நேரடியாக முறையிடலாம்.

மாதாந்தம் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பளத்தினை பெறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

அத்துடன் இராணுவத்தில் இணைவதற்கு பல பகுதிகளிலும் யுவதிகள் ஆர்வமாக உள்ளனர். எனினும் இப்பகுதி யுவதிகளுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தமிழ் யுவதிகளை இராணுவத்தில் சேர்க்கின்றோம்.

இலங்கையில் எந்த பாகங்களிலிருந்தும் இராணுவத்திற்கு ஆட்களை சேர்ந்துக்கொள்ளலாம்.  குறிப்பாக 25,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த காலங்களில் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைந்துகொண்டுள்ளனர். அதன்படி அடுத்தகட்டமாக இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே இங்கு யாரையும் வற்புறுத்தி இராணுவத்தில் இணைத்துகொள்ளவில்லை. அவ்வாறு யாரும் வற்புறுத்தியிருந்தால் என்னிடம் வந்து முறையிடலாம். அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிடலாம்.

அவ்வாறு முறையிடும் பட்சத்தில் நான் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad