தவறான பாலியல் செயற்பாட்டினால் மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர்
தவறான பாலியல் செயற்பாட்டினால் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள தொடர்பாமாடி வீடொன்றிலிருந்து அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில்
கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு வெளியேறியதாகக் கூறப்படும் மேற்படி இலங்கையர் 34 வயதுடையவர் என்றும், இவர் நான்கு அல்லது ஏழு நாட்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என்றும் கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே குறித்த இலங்கையருடன் தொடர்புகொள்ள முயன்றுள்ள அவரது நண்பர் ஒருவர், முயற்சி பயனளிக்காத நிலையில், பொலிஸாருடன் இலங்கையர் வசித்த தொடர்மாடி வீட்டுக்குச் சென்று வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். இதன்போது வீட்டுக்குள்ளிருந்து துர்நாற்றம் வந்துள்ளதுடன், கட்டிலில் அரை நிர்வாணக் கோலத்தில் உயிரிழந்திருந்த இலங்கையரின் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து போதைமருந்து உபகரணங்கள், ஜெல், பாலியல் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கண்டெடுத்தனர்.
இந்நிலையில், இவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவருடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் போலந்து நாட்டு பிரஜையொருவரையும் தேடி வருகின்றனர். இது ஒரு திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என மலேசியப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மேற்படி இறந்த இலங்கை நபர், ஒரு பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.