புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014


சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
அதிமுக பொதுச்செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், கே. சுகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு சிபாரிசு கடிதம் கொடுக்க லஞ்சம் கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

ad

ad