புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2015

காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் உருவாக்கப்படும்- ஜனாதிபதி
வடகிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும், யுத்தம் நிறைவடையும் காலப்பகுதிகளிலும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும்.
அந்த செயலகம் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு செயலமாக இருக்கும்.  சமகாலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி செயலகத்தை உடனடியாக உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் என்னை தொடர்பு கொள்ளும் வகையில் மேற்படிச் செயலகம் உருவாக்கப்படும்.
மேற்கண்டவாறு நேற்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாணசபை உறுப்பினரும், நாடாளுமன்ற வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனுடைய இல்லத்தில் காணாமல்போனவர்களின் பெற்றோர், உறவினர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் அனுபவிக்கும் மன துன்பங்கள் மற்றும் சிக்கல்களை நான் அறிகிறேன். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரும் எனக்கு தெரியும்,
ஜனாதிபதியான பின்னரும், அது எனக்கு தெரியும். ஜனாதிபதியான பின்னர் நான் இந்த விடயம் தொடர்பாக தேடிப் பார்த்தேன்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கையினை எமக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டிருக்கிறோம்.
மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பான உண்ன்மை நிலையினை கண்டறிவதற்கு தனியான செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
ஆனாலும் அதனை உடனடியாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால் இப்போது அதனை உருவாக்குவதனால் பல சிக்கல்கள், உருவாகும்.
எனவே நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அந்த செயலகத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த செயலகம் என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்பதுடன் இதற்காக விசேடமான உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், இலங்கையின் மற்றய பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் தங்கள் முறைப்பாடுகளை என்னுடைய கவனத்திற்கு எழுத்துமூலமாக கொண்டுவர முடியும்.
மேலும் விசாரணைக்கான குழு ஒன்றையும் இந்த செயலகத்தின் கீழ் உருவாக்குவோம்.
இதேபோன்று புதைகுழிகள் மற்றும் இரகசிய முகாம்கள் இருப்பது தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவாருங்கள். அதன் ஊடாக உங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கி அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வுகள் நடத்தப்படும்.
இதற்குமேல் உங்களுடைய பிள்ளைகள் எனக்கும் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகளின் வயதில் எனக்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு உங்களுடைய பிள்ளைகள் தொடர்பாக நிச்சயமாக பதிலளிப்பேன் என ஜனாதிபதி ஆறுதல் கூறினார்.

எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்


எங்கள் பிள்ளைகளை படையினரும், ஆயுதம் தாங்கியவர்களும் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது

ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு


ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று

வெளியிட்டது சனல் 4 கசிந்தது ஐ.நா ஆவணம்.


ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை

இலங்கையின் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்திய அனைத்துலக மனித உரிமை நிபுணர்!



இலங்கையில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச

உரி­மை­களை வென்­றெ­டுக்க கூட்­ட­மைப்­புடன் அணி திர­ளுங்கள்: மாவை சேனா­தி­ராஜா



60 ஆண்டு காலமாக உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ் மக்களின் இலட்சிய வேட்கை இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அந்த இலட்சியத்தை அடைவதற்கு தமிழ்த்

தமிழகத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வியாழக்கிழமை காலை அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்




மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதத்துக்குள் நடத்த ஐகோர்ட்



தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்

அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்


 நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம்.

துருக்கியின் கோரிக்கையை ஏற்று நேட்டோ இன்று அவசர கூட்டம்

துருக்கியின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேட்டோ அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.

தேசிய பிரச்சினைக்கு 13க்குள்; அரசியல் தீர்வு - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லாத அரசியல் தீர்வொன்றை ஆட்சியமைத்து 6 மாத

இந்திய தேசம் சோகத்தில் உலகத் தலைவர்கள் அனுதாபம்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

கூகுள் நிறுவனத்துடன் இலங்கை நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்பட இருப்பதாக

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு


யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி

யாழ்.மாவட்ட செயலக மடல் நாளை வெளியீடு


யாழ். மாவட்ட செயலகத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது செயலக மடல் நாளை வெளியிடப்படவுள்ளது.

யாழில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு


வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு ஒன்று இடம்பெற்றது.
 

கலாசாரத்தை மீறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட

காணாமல் போன இலங்கை மாணவி சென்னையில்

இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த மாணவி சென்னையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ad

ad