புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014

கடந்த வாரத்தில் 183 பேர் பொலிஸாரால் கைது 
 யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பொலிஸ்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட  விசேட நடவடிக்கையில் 183 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்
யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
 
 யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
 அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் பாரிய குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் குறித்த 183 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் பாரிய குற்றம் புரிந்த 03 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 02 பேரும் அடித்துக்காயப்படுத்திய 40 பேரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 07 பேரும்  பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 11 பேரும், வீதி விபத்தில் 02 பேரும், களவு தொடர்பில் 5 பேரும் அடித்து நஸ்டம் விளைவித்த ஒருவரும், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாமை வாகனம் செலுத்தியோர் 4 பேரும், சந்தேகத்தின் பேரில் 8 பேரும், கடத்தலில் ஈடுபட்ட ஒருவரும், இடையூறு விளைவித்த 3 பேருக்குமாக மொத்தம் 87 பேருக்கு எதிராக வழக்கு 
தொடரப்பட்டது. 
 
அது போல காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில்  பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட 7 பேரும் இபிடியாணை பிறப்பிக்கப்பட்ட 27 பேரும், சந்தேகத்தின் பேரில் 14 பேரும், குடி போதையில் வாகனம் செலுத்திய 3 பேரும் மற்றும் ஏனைய குற்றத்திற்காக 45 பேருமாக மொத்தம் 96 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகவும் வழக்குத் 
தொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad