21 ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட்:
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் மூன்று விக்கட்டுக்களால் வெற்றி
120 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என களம் புகுந்த சிவானந்தா வித்தி யாலய அணியினர் 32.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங் களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர்.
எம்.நிவாசன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டமும், சி.அனோஜன் 31, ஏ.பிரிவிராஜ் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணி சார்பில் செ.திவாகரன் 2, ரஸ்மின் 2, டெரன்ஸ் 1 விக்கட்டுக்களைவீழ்த்தினர்
இப்போட்டியில் சிற்நத களத்த தடுப்பாளராக சி.அகில்ராஸ் சிறந்த பந்து வீச்சாளராக எம்.நிவாசன், பந்து வீச்சாளர் வை.சசிகரன், போட்டி நாயகனான எம்.நிவாசன் ஆகியோர் தெரிவு செய்ப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு முந்நாள் வீரர் அமரர் மு.நர்மதன் நினைவாக விசேட பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன
திருகோணமலை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் மார்க் அன்டனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா கௌரவ விருந்தினராகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விNஜந்திரன் விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.