புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014

நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை; மங்களநேசன் கேள்வி 
நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை செய்யும் திட்டம் பூனைகள் எலிகளுக்கு இல்லையா என எதிர்க்கட்சி உறுப்பினர் மங்களநேசன் கேள்வி ஒன்றினை இன்று மாநகர சபைக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார். 


மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று இடம்பெற்றது. அதன் போது கால்நடை வைத்திய அதிகாரி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கருத்தடை செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

அதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர் மங்களநேசன் நாய்களுக்கு மட்டும் தானா கருத்தடை என்று கேள்வியினையும் எழுப்பினார். அதன்போது நீங்களும் கால்நடை வைத்தியரா என முதல்வர் மங்களநேசனைப் பார்த்து கேட்க சபையில் சிரிப்பொலி பலமாக இருந்தது

ad

ad