இரண்டாம் முறையாக கிளி.அபிவிருத்திக் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்
அதன்படி கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்திற்கான கூடடத்தில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்றைய தினத்திற்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர்
ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றதுஅதன்படி கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்திற்கான கூடடத்தில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இன்றைய தினத்திற்கு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய கூட்டமானது கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் காலை 10.15 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சுரேஸ்பிரேமச்சந்திரன் , சிறிதரன், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சில்வஸ்திரி அலன்ரின் , வடக்கு மாகாண அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராசா , டெனீஸ்வரன் , வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் , திணைக்கள தலைவர்கள், பிரதேச சபைகளைச் சேர்ந்த தவிசாளர்கள் என அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்