ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 4 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் இன்று அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்ததாக ஜனாதிபதி தேர்தல் பிரசார அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாத்தளை நகர சபை உறுப்பினர் துஷார பிரனாந்து, மாத்தளை பிரதேச சபை உறுப்பினர் அசித்த சேனாரத்ன, தொடாங்கொடை பிரதேச உறுப்பினர் பி.ஜே.எ.யு சிரிசேன, ஊவா பரணகம பிரதேச சபை உறுப்பினர் டி.எம். சிரிசேன ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை ஆளும் கட்சியின் பிரதி அமைச்சரான பைஸர் முஸ்தபா பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி சிங்கபூருக்கு பயணமாகியிருந்த பைஸர் முஸ்தபா நாடு திரும்பியதும் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சிங்கபூரிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடுதிரும்பியதும், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.