புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் – தொல்.திருமா கடிதம்

thirumavalavan
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும்தொல்.திருமாவளவன் கடிதம்

பெறல்
திரு. பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள்
இயக்குநர்,
தந்தி தொலைக்காட்சி
சென்னை.
வணக்கம்.
தங்களின் காட்சி ஊடகமான தந்தி தொலைக்காட்சியில் 29-12-2014 அன்று இரவு சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் நேர்காணல் ஒளிபரப்பாகவுள்ளது எனத் தெரிய வருகிறது. இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த, இனப்படுகொலைக் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜபக்சேவின் நேர்காணலை தங்கள் தந்தி தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும். தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கும்.
எனவே இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இதனைத் தங்களின் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருத வேண்டாம். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழித்தோன்றலான தங்களுக்கும் தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
உரிமை உணர்வுடன் கூடிய எமது இந்த வேண்டுகோளை ஏற்று இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்.

ad

ad