ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தாக்குதலில் பிரபல இசையமைப்பாளர் லக்ஷ்மன் விஜேவர்தனவும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
புதிய தலைமுறை அமைப்பின் கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து கொண்டிருந்தபோதே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.