புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2012


கூட்டமைப்பை ஆதரிக்காமை மு.கா. செய்த பெரும் துரோகம்; கொழும்பு மேயர் முஸம்மில் குற்றச்சாட்டு
 கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், என் ஆடைகளை துறக்க தயார் என்று பிரபல பொப் பாடகி மடோனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் கடந்த 24ஆம் திகதி இரவு பொப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி

விடுதலைப் புலிகளின் தடை மீதான தீர்ப்பாய விசாரணையில் வைகோ பங்கேற்பார்!
விடுதலைப் புலிகளின் தடை மீதான சட்டத் தீர்ப்பாயத்தின் விசாரணையில் வைகோ பங்கேற்பார் என்று மதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவை கல்வி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்?
கல்வி அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சகோதரரும், தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

பிள்ளையான் ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றதாக கருணா குற்றச்சாட்டு!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஆறாயிரத்துக்கும் குறைவான வாக்குகளை

விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமையில் திருத்தம் கொண்டு வரும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“எமது கிராமங்களில் இருந்து இராணுவமே வெளியேறு”: கிளிநொச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர்

 Points Srilanka 2  Newzealand 0
Match tied (Sri Lanka won the one-over eliminator)
டில்சான் அதிரடி: பரபரப்பான போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து சுப்பர் ஓவர் முறையில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

27 செப்., 2012


மாற்றான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தற்போது உறுதி படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் 12ம் தேதி ரிலிஸ் செய்யப்படுகிறது. 
சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் மாற்றான். இப்படத்தில் சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்

திமுகவுக்கு மேலும் மத்திய அமைச்சர் பதவி : கருணாநிதி மறுப்பு

: மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியதை அடுத்து மத்தியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அழைப்புக்கு கருணாநிதி
சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: இலங்கை அணியை நியூசிலாந்து சமாளிக்குமா
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் லீக் ஆட்டம் முடிந்தது. லீக் முடிவில் இங்கிலாந்து, இந்தியா (ஏபிரிவு),
நடிகை ரோகிணி டைரக்டராகிறார். 
இவர் தமிழில் மகளிர் மட்டும், ஆசை, '3' விருமாண்டி, 'ஐயா', 'வாமணன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

தா.பாண்டியன் இல்லத்திற்கு சென்று ஜெ. நேரில் வாழ்த்து!



கொல்கத்தாவில்  
அரசியல்வாதி கண்முன் 
நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி


சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா
வீட்டில் எடுத்த 12 ஆயிரம் ரூபாவுடன் திருமலை செல்லத் தயாரான 3 சிறுவர் வியாழன் இரவு பஸ் நிலையத்தில் மாட்டினர் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணை
 வீட்டில் இருந்த 12 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு திருகோணமலை செல்லும் பஸ்ஸில் பயணிக்க முயன்ற 10, 11 வயதை உடைய சிறுவர்கள் மூவர் அங்கிருந்தவர்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அடேலையும் போர்க்குற்ற விசாரணை செய்யுங்கள்; பிரிட்டனுக்கு இலங்கை கோரிக்கை
அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக பேர் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது ஐ.நா.

520 பக்கற் ஹொரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் டெகிவளையில் கைது

ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 520 பக்கற்றுகளுடன் பெண்ணொருவர் டெகிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் பெருந்தொகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும் என

முல்லைத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியில் புலமைப்பரிசில் பரீட்சையில் மூவர் முதலிடம் - பா.உ.சிறிதரன் வாழ்த்து
கிளிநொச்சி மாவட்ட மட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்கும் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் எச்சரிக்கை.
எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்பதாக அரச ஊழியர்களின் சம்பளம் ரூபா 13,442.50 சதத்தால் அதிகரிக்கப்படாவிட்டõல் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தலவாக்கலை - லிந்துலை பிரதான பாதையில் பெயார்வெல் தோட்டத்துக்கு அருகில் பாதையோரத்தில் தென்பட்ட சுரங்கம் போன்ற பகுதியைப் பொதுமக்கள் பார்வையிடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

பத்தடி உயரமான இந்தச்சுரங்கம் போன்ற பகுதி இயற்கையின் தோற்றமெனத் தொல்பொருளியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்
27 பைக்கற் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான இலங்கையைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணொருவரை அடுத்த மாதம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று உத்தரவிட்டார். 

26 செப்., 2012



புதிய இசைச் சாதனை படைத்த பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினருக்கு கனடிய மக்கள் மகுடம்
 பெருந்
திரளான மக்களின் பாட்டொலிகளுடனும் , ஆடலுடனும் நேற்று நண்பகல் 1 மணியளவில் பவதாரனியின் பாரதி கலைக் கோயில் குழுவினரின் 48 மணி நேர இடைவிடாத

25 செப்., 2012


அழகிரி வேறு, ஸ்டாலின் வேறு அல்ல! மதுரை திமுக நிர்வாகிகள் மத்தியில் கலைஞர் பேச்சு!
24.09.2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகத் தோழர்கள் மத்தியில் திமுக தலைவர் கலைஞர் பேசுகையில், 
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை: காலி ரிச்சமன்ட் கல்லூரி, தலாத்துஓயா கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதலிடம்கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காலி ரிச்மன்ட் கல்லூரி மாணவனான கே.எஸ்.

புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். கொக்குவிலைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காணவில்லை: பொலிஸில் முறைப்பாடு
யாழ். கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் காணாமற் போயுள்ளதாக இன்று யாழ்.பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பொலிஸார்

பிரிட்டனிலிருந்து மேலும் 600 இலங்கையர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்!
பிரித்தானியாவில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600  இலங்கையரை திருப்பி அனுப்ப  அந்நாட்டு அரசாங்கம்  தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது?
திமுக தலைவரான கருணாநிதிக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசும் இது குறித்து பரிசீலிக்க

வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்த விபசாரவிடுதிக்கும் மேர்வின் சில்வாவுக்கும் தொடர்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்பாளரால் வெள்ளவத்தையில் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற விபச்சார விடுதியே ஊழல்கள் மற்றும் இலஞ்சங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விசேட பொலிஸ் குழுவால் கடந்த

நுவரெலியாவில் குழந்தையை பெற்று காணில் வீசிய 18 வயது பாடசாலை மாணவி

தெரணியகல – உடபாகே தோட்ட மத்திய பகுதி லயன் ஒன்றின் காணில் இருந்து சிசுவொன்று தெரணியகல பொலிஸாரால் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

TWENTY WORLD CUP POINTS TABLE

Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
India220004+2.825329/40.0216/40.0
England211002+0.650276/40.0250/40.0
Afghanistan202000-3.475216/40.0355/40.0

நடப்புச் சம்பியனை வீழ்த்திய இந்தியா 90 ஓட்டங்களால் அபார வெற்றி
இந்திய அணி நிர்ணயித்த 171 என்ற ஓட்ட இலக்கை அடைய முடியாத நடப்புச் சம்பியனான இங்கிலாந்து அணியை இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
 


இருபது-20 உலகக் கிண்ண தொடரில் ஏ பிரிவில் இன்று இடம்பெற்ற லீக் போட்டியில் முன்னாள் சம்பியன் இந்தியாவும், நடப்புச் சம்பியன் அணி இங்கிலாந்தும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.

அயர்லாந்து மேற்கிந்திய போட்டி மழையால் பாதிப்பு: சுப்பர்8 சுற்றுக்குள் நுழைந்தது மேற்கிந்திய அணி
 




மேற்கிந்திய தீவுகள் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாது கைவிடப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட தனது குழுவில் ஓட்ட சராசரி விகிதத்தில் அயர்லாந்தை விட முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள்
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் முதலமைச்சர்கள் பதவியேற்பு
வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான முதலமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித்தும், சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் பதவியேற்றுள்ளனர்.
 
மாலினி பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகாவின் ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. 
இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .

இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்
இலங்கையின் 18ஆவது கடற்படைத்தளபதியாக ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்~வினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை,இதுவரை காலமும் கடற்படைத் தளபதியாக பதவிவகித்த வைஸ் அட்மிரல் சோமதிலக திசாநாயக அட்மிரல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.

யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வ
யாழ்.நெடுந்தீவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் செய்து, பொதுமக்கள், திணைக்கள அதிகாரிகள்  மற்றும் வர்த்தகர்களை சந்தித்து நெடுந்தீவின் நிலைமை

24 செப்., 2012


கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். 


ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது : ஐ.நா.சபையில் ஐஸ்வர்யாராய் பேச்சு 

 உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக

200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புல

சென்னை கலவரம் : 500 பெண்கள் சாலை மறியலால் பதட்டம்
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் கலவரத்தால் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில்  500 பெண்கள் குவிந்தனர்.  சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் ஊர்வலத்தில் இரு பிரிவினரால் கலவரம் :இந்து முன்னணி பிரமுகர் மண்டை உடைப்பு
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கலவரம் வெடித்தது.  தொண்டர் மண்டை உடைந்தது. 

புரளிகளை நம்ப வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை
விஸ்வரூபம் படம் திரைக்கு வருவது தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தமிழனின் ரத்தக்கறை படிந்த ராஜபக்சே பாழ்க்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கே அவமானம்: தமிழக பாஜக
புத்தர் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அடிக்கல் நாட்டியிருப்பது புத்தருக்கே அவமானம் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர் 
 முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ்,  இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.

காங்.கூட்டணி 300 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது: குலாம் நபி ஆசாத்
குலாம்நபி ஆசாத்,  ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,   ‘’தேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒவ்வொரு நாடும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது. 

அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
இலங்கையின் அரசியல் போக்கு அமெரிக்காவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை ௭ன்பதை, அந்த நாட்டின் அண்மைய நகர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட்

கிழக்கில் மு.காங்கிரஸின் முதலமைச்சர் இரண்டரை வருடம் பதவி வகிப்பார்! மீறினால் பாரதூர விளைவுகள் ஏற்படும்: ஹசன் அலி
கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக பதவி வகிப்பார். இவ் உடன்பாடு மீறப்படுமாயின் பாரதூரமான

இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்டால் பீரிஸ் பதவி விலகவேண்டும்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு, இலங்கை தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாக இருந்தால், வெளியுறவுத்துறை



கருவறையில் செந்தமிழ் : சுவிட்சர்லாந்து உலக சைவத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை

23 செப்., 2012



ஜெனீவாவில் பொங்கியெழுந்த ஐரோப்பா வாழ் தமிழர்களின் பேரெழுச்சியும் மீளெழுச்சியும்
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து

யாழ். மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 150 பேர் கைது
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றங்களில்

மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான ஜனநாயக ரீதியான பலமான ஒரு நிலையை கிழக்கு தேர்தலில் மக்கள் ஏற்படுத்தி தந்திருந்த போதிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மக்களின் ஆணையை துச்சமாக மதித்து அரசுடன்
KOODANKULAM PHOTOS
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித


அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 180 பேர் கடற்படையிரால் மீட்பு! கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைப்பு
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 180 பேர் இன்று சனிக்கிழமை இந்தோனேசிய கடல் எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படை மற்றும் ஏனைய கப்பல்களால் மீட்கப்பட்டனர்

வடபகுதியில் பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுடன் கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர் சிசன்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவர் மைக்கல் சிஸன் வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மற்றும்
உலகின் மிகவும் அவமானகரமான மானங்கெட்ட பத்துப்பேரின் பட்டியலை உலகப்புகழ் பெற்ற ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸனிற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் ஊழல் வாரிசான ராசா 2ம் இடம் பிடித்து பெருமைபெற்றுள்ளார். 
கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு

22 செப்., 2012


West Indies 191/8 (20/20 ov)
Australia 100/1 (9.1/9.1 ov, target 84)
Australia won by 17 runs (D/L method)

South Africa 78/4 (7/7 ov)
Sri Lanka 46/5 (7.0/7 ov)
South Africa won by 32 runs

இலங்கையை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
இலங்கை ஹம்பன்டோட்டாவில் இன்று நடந்த சி பிரிவு ஆட்டத்தில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா சந்தித்தன. பலத்த மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனதால், 7 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 

Photo: முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்.

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்”  என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள்  ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு  மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.  “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம்  அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில்  22 ஆண்டுகள் ஒரு  மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை  “இவன் மூடனல்ல  வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது  நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே  தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று,  22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி,  ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

“என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின்  புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப்  படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை,  அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன்  ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே  ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு  இழுக்கிறது.  தேவதைகளின் இதயத்தை இளக்கி,  கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

( http://www.vinavu.com/2008/12/16/manji/)தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.
முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து

இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்படவேண்டும்!- மத்திய பிரதேஸ் முதலமைச்சர்
இலங்கையில் தமிழர்கள்> சிங்களவர்களுக்கு இணையாக நடத்தப்படவேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பாகும் என்று மத்திய பிரதேஸ் முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளார்

பொங்கு தமிழ் நிகழ்வையொட்​டி ஜெனீவா நவநீதம்பிள்​ளையின் அலுவலக உயரதிகாரிக​ளிடம், தமிழர் பிரதிநிதிகள் மனு கையளிப்பு
இன்று நடைபெறவிருக்கும் "எமது நிலம் எமக்கு வேண்டும் " மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வையொட்டி நேற்று ஜெனீவா ஐக்கிய நாட்டு சபை மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின்  காரியாலயத்தில் உயரதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட

வைகோவை கைது செய்த மத்திய பிரதேச பொலிஸார், அவரை விடுவித்து மாலை அணிவித்து மரியாதை!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து

தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆலோசனை நிறுவனத்தினுள், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 படகுகளில் வந்து கடற்கரை வழியாக தூத்துக்குடி துறைமுகம் முற்றுகை
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்செப்டம்பர் 22ம் தேதியான இன்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக் கிழமையன்று பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி
வைகோ உட்பட மதிமுக.வினர் 1200 பேர் கைதாகி விடுதலை
மத்திய பிரதேச மாநிலத்திற்குள் நுழைய முயன்ற மதிமுக கட்சியின் தலைவர் வைகோ உட்பட 1200 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து மத்திய பிர

ad

ad