புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2012


ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது : ஐ.நா.சபையில் ஐஸ்வர்யாராய் பேச்சு 

 உலக அமைதிக்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவாக ஐ.நா.சபையில் விழா நடந்தது. அதில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். இதற்காக
அவர் தனது குழந்தை  ஆராத்யாவுடன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றார்.


அங்கு நடந்த விழாவில் பங்கேற்ற அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன், ஐ.நா. சமாதான தூதரும், நடிகருமான மைக்கேல் டக்ளஸ்,   இங்கிலாந்து மனித வாழ்வியல் நிபுணர் ஜானிகுடால், அமெரிக்க யூத எழுத்தாளரும், நோபல் பரிசு  பெற்றவருமான எலிவெசல், அமெரிக்க நடிகை மோனிக்காலமன் ஆகியோரை சந்தித்தார்.

இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் உலக மக்களுக்கு சமாதான செய்தி வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் அமெரிக்க மாணவர்களுடன்   நடந்த கலந்துரையாடலில் அவர் பங்கேற்றார். 
அப்போது நிலையான எதிர்காலத்துக்கான நிலையான அமைதி என்ற தலைப்பில் பேசினார். `ஓம் சாந்தி' என்ற சமஸ்கிருத ஸ்லோகத்துடன்  தனது பேச்சை தொடங்கினார்.


அப்போது அவர், ’’உங்களுடன் இருக்கும் போது நானும் ஒரு மாணவர் போன்று  உணர்கிறேன். ஐ.நா. சபை மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இந்த அமைப்பினால்தான் சிறந்த ஒற்றுமையான உலகத்தை படைக்க முடியும். ஒற்றுமைதான் தைரியத்தையும், சிறந்த தலைமையையும் வழங்குகிறது.
சகிப்பு தன்மை சிறந்தது. அதை நான் எனது தந்தையிடம் கற்று கொண்டேன். `நீங்கள்', `உங்களது', `நான்' என்ற  அகந்தையை கைவிட்டு  நாம், நாங்கள் என்ற உணர்வுடன் வாழ வேண்டும். நமது விருப்பு, வெறுப்புகளை கைவிட்டு ஒருவர் மீது ஒருவர் அன்புகொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைதியை பெற முடியும். 


ஆயுதங்களும், போர்களும் அபாயம் மிகுந்தது. எனவே, இளைய தலை முறையினர் ஆயுதத்தை கையில் எடுப்பதை கற்பனை செய்தும் பார்க்கக்கூடாது.

ஏனெனில் இது உலகத்தையும், தலைமுறையையும்   அழித்து விடும். ஆகவே அன்புடன் வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி,  பாதுகாப்புடன் வாழ வேண்டும். அமைதி, சமாதானம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல. அது உணர்வுகளின்  வெளிப்பாடு’’என்று பேசினார்.

ad

ad