புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2012


200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் தாழங்குப்பம் ஆகிய இடங்களில், போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

வட சென்னையில் பல இடங்களில் இருந்து, 200 விநாயகர் சிலைகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாக, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. காசிமேட்டில், 150 விநாயகர் சிலைகள், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடையில், 15, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், தாழங்குப்பதில் தலா, 15 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.


ad

ad