200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.சென்னையில் 200 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
பிரமாண்டமான, 200 விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, வைக்கப்பட்டிருந்த சிலைகளை கடலில் கரைப்பதற்காக, காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் தாழங்குப்பம் ஆகிய இடங்களில், போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.வட சென்னையில் பல இடங்களில் இருந்து, 200 விநாயகர் சிலைகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வழியாக, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கிரேன் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. காசிமேட்டில், 150 விநாயகர் சிலைகள், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடையில், 15, எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், தாழங்குப்பதில் தலா, 15 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.