புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2012

கண்டி, பல்லேகல விளையாட்டு மைதானத்துக்கு சூட்டப்பட்டிருந்த மலையகத்தின் புகழ் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயர் தற்போது பாவனையில் இல்லாதிருப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்ணம் விசனம் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு விசனம் தெரிவித்துள்ளார். 



அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரும் பிரபல சுழற்பந்து வீச்சாளருமான முத்தையா முரளிதரனின் பெயர் சூட்டப்பட்ட கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அதேபெயரைச் சூட்டுவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்குக்கு " முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் அரங்கு' எனப் பெயர் சூட்டப்பட்டது.

ad

ad