புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

நாளை திருச்சி வருகிறார் நரேந்திர மோடி
திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாளை வியாழக்கிழமை (செப். 26) திருச்சி வருகிறார்.

முதலமைச்சராக விக்கினேஸ்வரனை நியமிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம்

வடமாகாணசபை முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை நியமிப்பதற்கு ஏகமனதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளமை
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க ஐந்து நாடுகள் முயற்ச
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு ஐந்து நாடுகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை!– அரசாங்கம்
மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க இடமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீள அமைப்பதற்கு வட மாகாணசபைக்கு
நியூயோர்க் ஐ.நா சபையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் 68வது வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கூட்டத்தொடரின் இன்று 1 மணிக்கு தனது உரையினையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க் நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது அவர்கள், இலங்கையின் போருக்குப் பின்னரான நிலைமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நாட்டின் ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மாகாண சபைத் தேர்தலை நடாத்த இலங்கை அரசு எடுத்த முயற்சியையும், நல்லிணக்க
அனந்தியின் வீட்டின் மீது முன்னாள் புலிகளே தாக்குதல் நடத்தினர்!– திவயின - 
வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அனந்தி சசிதரனின் வீட்டின் மீது முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே தாக்குதல் நடத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வல்லிபுனத்தில் அமைந்துள்ள வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த்து.
ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை குறித்து அன்புமணி ராமதாஸ் ஆற்றிய உரை
இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 
இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது: ஒப்புக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.
Raghuvannan-marriage-Photo
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய

கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக
, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். இந்த தேர்தல்கள் நடந்த விதத்தை நேரடியாக கண்காணித்த கொமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்
கென்யத் தலைநகர் நைரோபியின் வெஸ்ட்கேட் ஷாப்பிங் காம்பிளக்ஸ் வர்த்தக வளாகம், தீவிரவதிகளின் முற்றுகைக்குள்ளாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையிlல், இவ்வளாகத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுக்கும் நோக்கில் ஆயுததாரிகள் யாரும் எஞ்சியிருக்கிறார்களா என்று வர்த்தக வளாகத்திற்குள் துருப்பினர் தேடிவருகின்றார்கள்.BBC
செவ்வாய்க்கிழமை காலையிலும்கூட அந்த இடத்தில் வெடிச்சத்தமும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்டிருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பின்னர் கூறினார்.
இந்த வாரமும் , கடந்த வாரமும் "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் இலங்கை மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகப் பல கட்டுரைகள் வெளியாகியிருந்தன. "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டின் பத்தி எழுத்தாளர் "Rosie DiManno" இலங்கை நிலவரங்களை நேரில் சென்று அவதானித்துக் கட்டுரைகளை அங்கிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறார். இன்று அவர் எழுதி "ரொறொன்ரோ ஸ்ரார்" ஏட்டில் வெளியான கட்டுரையின் தலைப்பு "New era begins after Tamils win key election". அந்தக் கட்டுரையில் // Tamils were not bought off by the extensive reconstruction, all the multi-millions - from China, mostly-poured into new roads , new infrastructure, new hospitals, new commercial buildings, even a new sports stadium that's going up outside the new trail station.// இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா

போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில் பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின்

பாரதிய ஜனதாவில் ரஜினி. விஜயகாந்த் அதிர்ச்சி. ஜி.கே. வாசன் உள்பட பல தலைவர்கள் ரஜினியுடன் இணைய அதிரடி முடிவு

வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக “சோ” அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை
ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 
காங்கிரசை வீழ்த்த பா.ஜனதா–தே.மு.தி.க.–ம.தி.மு.க. ஓரணியில் திரள வேண்டும்: தமிழருவி மணியன் பேட்டி
காந்தீய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறியதாவது:–
தமிழகத்தில் நடந்து வரும் கச்சத் தீவு பிரச்சினை,
திரைத்துறையில் பெரும்பங்காற்றியவர் ஜெயலலிதா: ஜனாதிபதி பாராட்டு

சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பேசியதாவது:-
16 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் முதல்–மந்திரி ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
ஜெகன் மோகன் ரெட்டி முறைகேடாக பல கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அவர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் 27–ந்தேதி கடப்பா தொகுதி எம்.பி.யான ஜெகன் மோகன் ரெட்டியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா, அமிதாப், ஸ்ரீதேவி உட்பட 41 பேருக்கு பதக்கங்களை வழங்கினார் பிரணாப் முகர்ஜி
முதல்வர் ஜெயலலிதா உள்பட திரைத் துறையில் சாதனை படைத்த 41 பேருக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழா பதக்கங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை தாக்கல்

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித
விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்களை புகுத்த கோத்தபாய திட்டம்
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் - இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கை இராணுவ அச்சுறுத்தல்: கொமன்வெல்த் குழு கடும் சாட்டம்- [ பி.பி.சி ]
கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக, கொமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
டுவிட்டரில் பதிலளிக்கும் ஜனாதிபதி மகிந்த
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், நியூயோர்க்கில் இருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்!- நாராயணசாமி நம்பிக்கை
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பார் என இந்திய மத்திய இணையமைச்சர் வி. நாராயணசாமி இன்று தெரிவித்தார்.
பலத்த சர்ச்சைகளின்  பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டமைப்பு கூட்டம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிபெற்ற தோல்வியடைந்த அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

24 செப்., 2013

என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பேன்- தமிழ் உறவுகளுக்கு நன்றி

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்)இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடியதன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னைஉங்களுடைய பிரதிநிதியாக
த.தே.கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவுசெய்யப்பட்ட போது முன்னால் விடுதலைபுலி உறுப்பினர் தயாமாஸ்டர் கலந்துகொண்டதன் நோக்கம் என்ன?
ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச உரை : துளைத்தெடுக்கும் இன்னர்சிட்டி ஊடகம் ! எதிர்ப்பினைக்காட்ட தயாராகும் தமிழர்கள் !
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்று வதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ள நிலையில், ஐ.நாவுக்குள் இயங்கும் சுதந்திர ஊடகமாக
வட மாகாண முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்!
 
இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதிக்கு..! மற்றது பெண்ணொருவருக்கு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப் பெற்ற போனஸ் ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் பிரதிநிதியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

23 செப்., 2013


முதல்வராக பதவியேற்க உள்ள சி.வி.விக்னேஸ்வரன், 1939 அக்., 23ல், கொழும்பில் பிறந்தார். இவரது பெற்றோர், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் அருகே மணிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள். தந்தை கனகசபாபதி, அரசுப் பணியில் இருந்தார். அதனால், அவரது குடும்பம் அடிக்கடி வெவ்வேறு இடங்களில் குடியேறியது.விக்னேஸ்வரன் துவக்க கல்வியை, "குருநாகல் கிரைஸ்ட்ச் சர்ச்' கல்லூரியிலும், அனுராதாபுரம் பள்ளியிலும் படித்தார். பி.ஏ., படிப்பை, லண்டன் பல்கலைக் கழகத்திலும்; சட்டப்படிப்பை, கொழும்பு பல்கலையிலும் முடித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் சார்பில்
இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
இலங்கையில், இறுதிப் போருக்குப் பிறகு பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, ஐந்து கட்சிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்தித்திருப்பதும், முதலமைச்சர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தியதும், இலங்கைவாழ் தமிழர்களிடையே தற்போது நிலவும் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது. இந்த ஒற்றுமை, தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நீடிக்கும் என்று நம்புகிறோம். நீடிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 74 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதையும், இலங்கை அதிபர் ராஜபட்ச சார்ந்துள்ள கூட்டணி, மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதையும் பார்க்கும்போது, ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை இலங்கைத் தமிழர்கள் இத்தேர்தலில் காட்டியியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாக வேண்டும். அதனால், இந்த வெற்றி, தமிழர்களுக்குப் புதிய அதிகார பலத்தைத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது முழுமையான அதிகாரம் இல்லை என்பதும், இம்மாகாண ஆளுநராக ஒரு சிங்களரைத்தான் ஆளும்கட்சி நியமிக்கும் என்பதும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்க் கட்சிகள் தாங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்வது இயலாது என்பதும் தெரிந்தாலும்கூட, தமிழர்களுக்குத் தங்களை நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரம் கிடைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் தற்போது கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டாட வேண்டும். பிறகு முழுஅதிகாரம் பெறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகள்!-Dinamani 

"இவ்வளவு தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் இயல்பாக வாழ்வதற்கும் ஜனநாயக ரீதியில் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கவும் முடிந்திருக்கிறது என்றால், இலங்கை அரசு எவ்வளவு நியாயமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை உலகம் அறியும்' என்று
மனித உரிமைகள் கண்காணிப்பத்தின் 'உலக ஆண்டறிக்கை-2013' : சிறிலங்கா பற்றிய குற்றப் பட்டியல்

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் ஜனநாயக ஆட்சியை மீறும் செயல்களை 2012லும் தொடர்ந்தும் மேற்கொண்டதுடன், 2009ல் நாட்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் தனது தரப்பால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு
யாழ்ப்பாணத்தில் வெற்றியைப் பறிகொடுத்த வேட்பாளர்களின் விருப்புவாக்குகள்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறைந்தளவு விருப்பு வாக்குகளைப் பெற்றதால், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களில், ஈபிடிபியின் முதன்மை வேட்பாளர் தவராசாவும் உள்ளடங்கியுள்ளார். 
ஆனந்தி என்ற அட்சயபாத்திரம் 
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆனந்தி என்ற பெயரின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்கள், முடங்கிக் கிடந்த தமிழர்கள் மத்தியில் ஒரு துணிவைக் கொடுத்தது. இவரின் துணிச்சலின்பால் அதிகமான தமிழர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.
 jj
எதிர்பார்த்ததை விட அரசாங்கம் வடமாகாணத்தில் படு தோல்வி; சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசா
வடமாகாணத்தில் அரசாங்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க படதோல்வியடைந்தமை தமிழர்களின் பலத்தை உறுதிப்படுத்தியது என சிரேஸ்ட சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீ.வி.விக்னேஸ்வரன் - கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்
தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தீவகத்தில் தோல்வியைத் தாங்கமுடியாது ஈ.பி.டி.பி யினர் அடாவடி! மக்கள் மீது தாக்குதல்
தீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்க முடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள்.

22 செப்., 2013

ananthi_CI

யாழில் 87,870 வாக்குகளைப் பெற்று சாதித்த அனந்தி சசிதரன் (எழிலன்)

பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு துணிவுடன் வீரப் பெண்ணாக வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு வரலாறு படைத்திருக்கிறார் அனந்தி சசிதரன் அக்கா.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக 87,870 விருப்பு
கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றோர
* சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255
* எ. ஆனந்தி -87870
* த. சித்தார்த்தன் -39715 (புளொட் தலைவர்)
* ஆர். ஆர்னோல்ட் -26888
* சீ.வீ.கே. சிவஞானம் -26747
* பா. கஜதீபன் -23669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)
* எம்.கே. சிவாஜிலிங்கம் -22660
* எஸ். ஜங்கரநேசன் -22268
* ச. சுகிர்தன் -20541
* எஸ். சயந்தன் -20179
* விந்தன் கனகரத்தினம் -16463
* எஸ். பரம்சோதி -16359
* எஸ். சர்வேஸ்வரன் -14761
* எஸ். சிவயோகம் -13479

* க. தர்மலிங்கம் -13256
* எஸ். குகதாஸ் -13256
* த. தம்பிராசா -7325
* என். வி. சுப்பிரமணியம் -6578
* ஆர். ஜெயசேகரம் -6275
ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்..
க. கமலேந்திரன் -13632
சி. தவராஜா -9803
ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
ஏ. சூசைமுத்து -4666
எஸ். பாலகிருஸ்ணன் -4611
அ. அகஸ்டின் -2482
எஸ். கணேசன் -1966
சுந்தரம் டிலகலால் -1963
ஞானசக்தி சிறிதரன் -1939
கோ.றுஷாங்கன் -1074
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விருப்பு வாக்குகள்..
இ. அங்கஜன் -10034
எம். சீராஸ் -3323
எஸ். அகிலதாஸ் -2482
சர்வானந்தன் -2293
மு. றெமிடியஸ் -1801
எஸ். கதிரவேல் -1605
அ. சுபியான் -1046
எஸ். பொன்னம்பலம் -797

யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சீ.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால்

நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  . நீண்ட காலமாக வவுனியாவை பின்தளமாக  கொண்டியங்கும் இவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றது  பற்றி அவரே கூறுகிறார் 
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து “அதிரடி” இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வினவியபோது,நன்றி அதிரடி 
tna.membersதமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத்தேர்தலில் வெற்றியடைவோம்
எமது இணையதள கருத்துகணிப்பின் படி முடிவுகள்  பெரும்பாலும் அமைந்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட விருப்புவாக்கு விபரம் !


01.சி.வி.விக்னேஸ்வரன்
02.அனந்தி எழிலன்
03.கஜதீபன்
04.சித்தார்த்தன்
05.சிவாஜிலிங்கம்
06.ஆர்னோல்ட்
07.தர்மலிங்கம்
08.சுகிர்தன்
09.சயந்தன்
10.ஐங்கரநேசன்
11.சிவயோகன்
12.பரஞ்சோதி
13.விந்தன்
14.சீ.வி.கே.சிவஞானம்
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் – முதலிடத்தில் மருத்துவர் சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்களை வவுனியா மாவட்ட செயலகம் வெளியிடப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி விருப்பு வாக்குகளில் அரியரட்ணம் முன்னணி - ஆனந்தசங்கரி தோல்வி

மைவடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம்  வெளியிட்டுள்ளது.
அனந்தி அவர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்!!!

வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.  
ட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்! - மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது-ஆனந்தசங்கரி தோல்வி 6 ஆம் இடம் 
1.       பசுபதி அரியரத்தினம் -27264 விருப்பு வாக்குகள்

2.       தம்பிராசா குருகுலராசா � 26427 விருப்பு வாக்குகள்

3.       சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை � 26132 விருப்பு வாக்குகள்.
யாழ் மாவட்டத்தில் விருப்பு வாக்கு அடிப்படையில் ஆனந்தி,விக்கினேஸ்வரன்,கஜதீபன்,ஐந்கரநேசன் ,சித்தார்த்தன் ,சிவஞானம்,சிவாஜிலிங்கம்,சுகிர்தன்,தம்பிராசா  ஆகியோர் முன்னணியில் உள்ளனர் .
இன்று அமெரிக்கா  செல்லும் மகிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டகள் நடாத்த  ஏற்பாடாகி உள்ளன 
30 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசுக்குப் பேரிடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் - மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது
தீவுப்பகுதி எழுச்சி கொண்டது -சாதனை

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு - வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வவுனியாவில்கூட்டமைப்பின் சார்பில்  பிரபல மருத்துவர் சத்தியசீலன்,முன்னாள்  நகர சபை தலைவர் லிங்கநாதன்(ப்ளாட் ) வெற்றிபெற்றுள்ளனர் 


1.வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் 
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரங்களில் தற்போது கிடைக்கப் பெற்ற விபரங்களாக,
1. வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் (புளொட் வேட்பாளர்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் 
அவர்களின் விருப்பு வாக்கு விபரங்களின்படி…
1. ஜெகநாதன் (முதலாமிடம்)
2. டொக்டர் சிவமோகன் (இரண்டாமிடம்)
3. கனகசுந்தரசுவாமி (மூன்றாமிடம்)
4. ரவிகரன் (நான்காமிடம்) ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
அரச தரப்பில் ஜனாபர் என்பவரும் தெரிவாகியிருக்கின்றார்.
விக்னேஸ்வரன்- ஜெயலலிதாவிற்கு இடையில் விசேட சந்திப்பு
வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
ஒரே பார்வையில் வடமாகாண சபை தேர்தல் முடிவுகள்….
யாழ்ப்பாணம் மாவட்டம்
ஊர்காவற்றுறை
இலங்கை தமிழரசு கட்சி – 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164
சோசலிச சமத்துவக் கட்சி – 29
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு – 21
ஐக்கிய தேசியக் கட்சி – 17

வடமேல் மாகாண சபைத் தேர்தலின் 

குருணாகல் மாவட்டம் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.


       ""ஹலோ தலைவரே... எல்லாக் கட்சிகளும் எம்.பி. தேர்தலுக்காகப் பரபரப்பாகிக்கிட்டிருக்குது. சும்மா இருக்கிற கட்சிகளைக்கூட, யாருகூட கூட்டணின்னு கேட்டு மீடியாக்கள் உசுப்பேத்துறதால அரசியல் வட்டாரம் விறுவிறுப்பா இருக்குது.''
கண்டி மாவட்டம் - கலகெதர தேர்தல் தொகுதி   ஐ.ம.சு.மு.-  19,072 ஐ.தே.க.-  8,931 ஜ.க.-  1,548 
மாத்தளை மாவட்ட - இறுதி முடிவு   ஐ.ம.சு.மு. - 135,128 - 7 ஆசனங்கள்  ஐ.தே.க. - 63,365 - 3 ஆசனங்கள்  இ.தொ.கா. - 10,498 - 1 ஆசனம் 

வடமாகாண சபை தேர்தல்! ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30 
தேர்தல் நியாயமாக நடக்கவில்லை! அநேகமான வன்முறைகள்! இரு வீடுகள் தீக்கிரை: கஃபே குற்றச்சாட்டு-பீ பீ சீ 
இலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நடந்துமுடிந்துள்ள மாகாணசபைத் தேர்தல்கள் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கவில்லை என்று கஃபே என்ற சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
எங்கள் தாடி தலைவன் வீ.என்.நவரத்தினம் அவர்களின் வெற்றிகரமான தொகுதி இது 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 22,922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,193
ஐக்கிய தேசியக் கட்சி - 89


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 27,415
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,378
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29,793
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49,479

மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டம் உடுநுவர தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,613
ஐக்கிய தேசியக் கட்சி - 19,071
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,448

எங்கள் தலைவர்களில் ஒருவரான  துரைரத்தினம் வாகை சூடி களமாடிய தொகுதி முடிவுகள் 

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 17,719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2,953
ஜனநாயக ஐக்கிய முன்னணி - 163


செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 21,038
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -1,444
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22,482
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35,054

இன்று தேர்தல் முடிவுகளை அறிய எம்மோடு இணைந்திருந்த ஆயிரக்கணக்கான  உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களுக்கு  நன்றி. எமக்கு செய்திகளை வழங்கிய ஆதரவு ஊடகங்கள் நிருபர்களுக்கு நன்றி 

மதிய வடமேலமாகான சபை முடிவுகள் தொடரும் 
வட மாகான சபை தேர்தல் இறுதி முடிவு .நேரம் உள்ளூரில் 05.00 மணி 

கூட்டமைப்பு    -28 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி- 7 ஆசனங்கள்
முஸ்லிம் காங்கிரஸ்             - 1 ஆசனம்

கூட்டமைப்பு 28

யாழ்ப்பாணம்  14
வவுனியா 4
மன்னார் 3
முல்லைத்தீவு 4
கிளிநொச்சி 3


போனஸ் ஆசனம் 2 கிடைக்கலாம்


ஐக்கிய சுதந்திர முன்னணி 7

மன்னர் ,முல்லைதீவு  ,கிளிநொச்சி தலா  1வீதம் 3

யாழ்ப்பாணம்,வவுனியா தலா   2 வீதம்  4

முஸ்லிம் காங்கிரஸ்  1
மன்னார் 1

மன்னார் மாவட்டம் - இறுதி முடிவு 
  தமிழரசுக்கட்சி-  33,118 - 3 ஆசனங்கள்
 ஐ.ம.சு.மு.-  15,104 - 1 ஆசனம் 
ஸ்ரீ.மு.கா.-  4,571 - 1 ஆசனம் 
மன்னார் மாவட்டம் - மன்னார் தேர்தல் தொகுதி 
  தமிழரசுக்கட்சி-  31,818 
ஐ.ம.சு.மு.-  14,696 ஸ்ரீ.
மு.கா.-  4,436 -

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,6467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,386
ஐக்கிய தேசியக் கட்சி - 177

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 31,411
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 3,195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,606
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,616

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் லக்கலை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 26,351

ஐக்கிய தேசியக் கட்சி - 12,525
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 1,703

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 48,505

ஐக்கிய தேசியக் கட்சி - 19,114
மக்கள் விடுதலை முன்னணி - 1,539

வடமாகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.


இலங்கைத் தமிழரசுக் கட்சி - 41,225

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16,633

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,991

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 62,365
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,416
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 66,781
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94,644
இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டமைப்புக்கு இதுவரை 25 ஆசனங்கள் . இன்னும் மன்னார் மாவட்ட முடிவு வரவேண்டும் . தவிர போனஸ்ஆசனங்கள் 2 கிடைக்கும் 
யாழ்ப்பாணம் மாவட்டம் .இறுதி யான உத்தியோக பூர்வ முடிவு 

கூட்டமைப்பு 2,13907--14 ஆசனங்கள்
ஐக்கிய சுதந்திர முன்னணி 35955  -2 ஆசனங்கள்
 ஐக்கிய தேசிய கட்சி   855
வவுனியா மாவட்டம் இறுதி முடிவு 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதி
 தமிழரசுக் கட்சி 40,324    -4  ஆசான்கள் 
 ஐ.ம.சு.மு. 16,310         -2ஆசனங்கள் 
ஸ்ரீ.மு.கா. 1,967
இதோ கூட்டமைப்பின் கட்சிளின்  தலைவர்களில் ஒருவரான சித்தார்த்தனின் அவரது தந்தையின் கோட்டை வெற்றி செய்தி 
யாழ்ப்பாண மாவட்டம்  உடுப்பிட்டி தேர்தல் தொகுதி   தமிழரசுக்கட்சி  18,855 ஐ.ம.சு.மு.  2,424 ஐ.தே.க.  57 - 
அன்பு தமிழ் நெஞ்சங்களே எமது இணையம் பற்றிய முகவரியை, எமது செய்திகளை  உங்கள் முகநூல் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி 
உத்தியோக பூர்வ செய்தி 

வவுனியா மாவட்டம்  வவுனியா தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  40,324 ஐ.ம.சு.மு.  16,310 ஸ்ரீ.மு.கா.  1,967
இதோ எங்கள்  போராளி குடும்ப தலைவி ஆனந்தி எழிலனின் தொகுதி 

யாழ்ப்பாண மாவட்டம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி - 23,442 ஐ.ம.சு.மு. - 3,763 ஐ.தே.க. - 173 - 
யாழ்ப்பாண மாவட்டம்  மானிப்பாய் தேர்தல் தொகுதி   தமிழரசுக் கட்சி  28,210 ஐ.ம.சு.மு.  3,898 சுயேச்சை6 -109

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் மாத்தளை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,138
ஐக்கிய தேசியக் கட்சி - 15,025
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 3,580

தந்தை செல்வாவின் கோட்டையில் மீண்டும் ஒரு முறை வீடு சின்னத்துக்கு வெற்றி இதோ

வடமாகாண சபைத் தேர்தலின் யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 19,596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4,048
சுயேச்சைக் குழு7 - 62

வவுனியா மாவட்டம் -தற்போதைய செய்தி -உத்தியோக பூர்வம்  அற்றது

கூட்டமைப்பு 41,200
ஐக்கிய சுதந்திர முன்னணி 17.000
ஐக்கிய தேசியக் கட்சி 42
பிந்திய செய்தி 

த.தே.கூ வெற்றியை வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்- பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் சற்று முன்னர் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மவையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பில் எதுவும் தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
தேசியத்தலைவரின் மண் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி திலகம் இட்டு வரவேற்பு 
வடமாகாணசபை முடிவில் ஒன்று
மாவட்டம்:யாழ்மாவட்டம்
வல்வெட்டித்துறை தொகுதி
த.தே.கூ:23442
ஜ.ம.சு.கூ :3763
 

மத்திய மாகாண சபைத் தேர்தலின் மாத்தளை மாவட்டம் றத்தோட்டை தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 29,568
ஐக்கிய தேசியக் கட்சி - 14,103
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 5, 040

மகிந்தாவுக்கு மற்றுமொரு தலையிடி கண்டி மாவட்டம் பறிபோனது ஆனால் மத்திய மாகான சபைக்கு மற்றைய மாவட்ட முடிவுகளும் வரவேண்டும் எமது  ஆதரவாளர் மனோ கணேசன் ஐ தே கட்சியில் இணைந்து போட்டியிட்டார்

மத்திய மாகாண சபைத் தேர்தலின் கண்டி மாவட்டம் கண்டி தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 10,047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 9,456
ஜனநாயகக் கட்சி - 1,741

இதுவரை கிடைத்த முடிவுகளின் படியே கூட்டமைப்பு வடமாகாண சபையை  கைப்பற்றி  கூற வேண்டும் .வவுனியா மன்னார் முடிவுகளே  தேவை இல்லாத நிலை இப்போது 

வடமாகாண சபைத் தேர்தலின் கிளிநொச்சி மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737
ஈழவர் ஜனநாயக முன்னணி - 300
செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 45,459
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 4,735
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 50,194
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68,600
இலங்கை தமிழரசுக் கட்சி - 3 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்

இலங்கையில் எல்லா மின்னியல் ஊடகங்களும் முடக்கம் . வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையதளங்களை இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடை செய்துள்ளார்கள் .எமது இணையம் கூட  வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது .புலம்பெயர் உறவுகள் உங்கள்  தாயக உறவுகளுக்கு தேர்தல் செய்திகளை வேறு வழிகளில் தெரிவித்து மகிழுங்கள் 

ad

ad