புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2013

என்றும் உங்கள் நம்பிக்கைக்குரியவளாக இருப்பேன்- தமிழ் உறவுகளுக்கு நன்றி

நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்)இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடியதன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னைஉங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும்அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியைஎப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை.

என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும்உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான்அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.

எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும்அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை.

இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும்அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான்நினைக்கிறேன். எமது மக்களினதும், மண்ணினதும்விடியலுக்காக தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்டகுடும்பத்தலைவனை போரில் பிரிந்து மூன்றுபெண்குழந்தைகளுடன் நின்றிருந்த எனக்கு நீங்கள் நீட்டியஆதரவுக்கரம் வலிமையானது.

இதன் மூலம் என்னைப்போன்ற பெண்கள் ஆயிரமாயிரமாகஅவலம் சுமந்து வாழும் இந்த நாட்டில் என்மூலமாகஅவர்களுக்கும் வாழ்வியல் குறித்த நம்பிக்கையை மிகத்தெளிவாக வழங்கியிருக்கிறீர்கள். இன விடுதலைக்கு போராடியபோராளிகளை, அவர்களின் குடும்பங்களை நமது சமூகம்அநாதரவாக விட்டுவிட்டது என்று மேற்கொள்ளப்பட்டு வந்தபரப்புரையை பொய்யுரையென நிருபித்து காட்டியுள்ளீர்கள்.

இத் தேர்தலில் நீங்கள் எனக்களித்துள்ள ஒவ்வொரு வாக்கும்ஆணித்தரமாக அதனை சர்வதேச சமூகத்திற்கும்எடுத்துக்காட்டியுள்ளது. சலுகைக்காக கைகட்டி சேவகம்செய்யாதபடி எங்களை நையாண்டி செய்தோரை நாடு சிரிக்கவைத்துள்ளீர்கள். ஒப்பற்ற வீரம், அப்பழுக்கற்ற அர்ப்பணிப்பு,பூரிக்கவைக்கும் தியாகம் அத்தனையும் மறந்து போக நாம்ஒன்றும் ஈனம் கெட்ட பிறப்புக்கள் அல்ல என்பதை உறுதிபடஉங்களின் வாக்குகள் மூலம் உரத்து –உலகுவியக்க-சொல்லியுள்ளீர்கள். மெய்சிலிர்க்க வைத்துள்ளீர்கள்.

உங்கள் உணர்வுகளுக்கும், எனது நியாயம் கோரும் குரலுக்கும்அங்கீகாரம் கிடைத்துவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகளையும், தில்லுமுல்லுகளையும் நீங்கள் உதாசீனம் செய்தவிதம், கம்பீரமான இன உணர்வின் வெளிப்பாடே!

எங்கள் பகைவர் எஙகோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்குதமிழர்க்கு இன்னல் விழைந்தால்

சங்காரம் நிஜமன்று சங்கே முழங்கு…

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளே இத்தருணத்தில்நினைவுக்கு வருகிறது.

ஒரு கட்டத்தில் பகிரங்கமாகவே மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி என்பது நீங்கள் அறிந்த விடயமே.

எனது ஆதரவாளர்களான சகோதரர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள்,பலமாக காயப்படுத்தப்பட்டார்கள். எனது செய்திகளைஇருட்டடிப்புச் செய்தார்கள்

என்னை தோல்வியுறச் செய்வதாக சபதமேற்ற மனிதர்களும்இல்லாமலில்லை. தேர்தல் தினத்தன்று நான் அரசுடன்இணைந்துவிட்டதாக அபத்தமான செய்தி தாங்கியபோலிப்பத்திரிகை வெளியிட்ட கையாலாகாத்தனமும்அரங்கேறியது. காணாமல் போன எனது கணவரை விடுவிக்கஅரசியல் பேரத்தில் நான் ஈடுபட்டிருப்பதாக அதில் பிரச்சாரம்செய்ய முயன்ற அநாமதேயங்களை காலம்அடையாளப்படுத்தவே செய்யும். எனக்கு வாக்களித்த 80ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை, அவர்களது இனமானஉணர்வை தெளிவாக்க பல்வேறு வழிகளிலும் உதவியஅனைத்து ஊடகங்கள்- ஊடகவியலாளர்கள் அனைவருக்கும்எனது ஆத்மார்த்த நன்றிகள்.

என்னை எதிர்த்தவர்கள், எதிர்த்து பிராச்சாரம் செய்தவர்கள்,தாக்கியழிக்க முயன்றவர்கள் அவதூறு செய்தவர்கள் எனஅனைவருமே அவர்களையறியாமலேயே அவர்களின்கோமாளித்தனமான செயற்பாடுகளால் எனது வெற்றிக்குஉதவவே செய்துள்ளனர். ‘அனந்தி’ என்ற அதிகம் முகமறியாதஎனக்கு – தன்மான – இனமான உணர்வுடன், ஆபத்துக்கள்,அச்சுறுத்தல்கள் அனைத்திற்கும் அஞ்சாமல் தாமாகவேமுன்வந்து எல்லாவகையிலும் எனது வெற்றிக்கு உதவிசெய்தஇளையதலைமுறை இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும்எப்படி நன்றி சொல்லமுடியும்? அவை காலத்தினாற் செய்தஉதவிகள்.

மேலிடத்து அறிவுறுத்தல் – அச்சுறுத்தல் நிர்ப்பந்தங்களைஅச்சமின்றி புறம்தள்ளிவிட்டு தம் மனச்சாட்சிக்கு மதிப்பளித்துஎனக்கும் பெருமளவில் தபால்மூலம் வாக்களித்த அரசஊழியர்களின் உணர்வுக்கு எனது நன்றிகள்.

எனது வெற்றிக்கும், வெளியே இருந்து ஆதரவு அளித்ததமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட சக கட்சிகளுக்கும்என்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்ற மனிதநேயமற்ற செயற்பாடுகள் தார்மீக உணர்வுடன் கண்டித்தஅனைத்து தரப்பினருக்கும் நன்றிகள்.

என்னை வேட்பாளராக ஏற்று, வேண்டிய உதவிகள்ஆலோசனைகள் வழங்கிய எனது கட்சித்தலைமைக்கும்,சகோதர வேட்பாளர்களுக்கும், ஏனைய ஆதரவாளர்களுக்கும்அவர்களோடு இணைந்து எமது, இனத்தினதும், மண்ணினதும்,மொழியினதும் மேன்மைக்காக உறுதியுடன் எந்த வல்லாதிக்கசக்தியினதும் அழுந்தங்களுக்கு அடிபணியாமல்செயலாற்றுவதே நன்றியென நினைக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக – நிலம்பெயர்ந்து – புலம்பெயர்ந்துதாயக நினைவுடன், தமிழ் உணர்வுடன், வாழும் எமது உறவுகள்காலமுணர்ந்து காட்டிய பேராதரவை எப்படி சொல்வது..? நேசஉறவுகள் அனைவருக்கும் என் பாசமிகு நன்றிகள்.

காலமும் மக்களும் எமக்கிட்ட பணியை

நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல

உங்கள் கரங்களுடன் என் கரங்களை நன்றியுடனும்

உறுதியுடனும் பற்றிக்கொள்ளும்

உங்கள்

அனந்தி சசிதரன் (எழிலன்)
Like ·  · 

ad

ad