புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

தீவுப்பகுதி எழுச்சி கொண்டது -சாதனை

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு - வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.

கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.

இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 

ad

ad