புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்க ஐந்து நாடுகள் முயற்ச
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கு ஐந்து நாடுகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது,
வட மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட காரணத்தினால் இவ்வாறு சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் முனைப்புக்களில் சில நாடுகள் ஈடுபட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களைப் பயன்படுத்தி இந்த இரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்களுக்கு அமைவாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நாடுகளைச் சேர்ந்த மூன்று தூதுவர்கள் அண்மையில் வடக்கிற்கு சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதேவேளை, வடக்கு மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குமாறு கோரி பிரித்தானிய தமிழர் பேரவை, அந்நாட்டு அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

ad

ad