புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் மு.க. அழகிரியைப் புகழ்ந்து வைகோ பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இது குறித்து மதிமுக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் ரொக்கையா பீவி தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ள கருத்து
:
சென்னை தாயகத்தில் நடந்த மதிமுக ஆட்சிமன்றக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அதில் பேசிய வைகோ, மு.க. அழகிரியிடம் ஒரு உயர்ந்த பண்பு உண்டு. இயக்கத்துக்காக பாடுபட்ட தொண்டனை, தன்னை நம்பி வந்தவனை, பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய தயங்க மாட்டார். அவரது இந்த உயர்ந்த பண்பு உள்ளபடியே என்னை வியக்க வைக்கின்றது என்றார் வைகோ. மற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்பது இதுதானோ!

ad

ad