புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் இவ்வளவு பணம்  எப்படி வந்தது?மேனகா காந்தி கேக்கிறார் 
பெரைல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனது எப்படி? என  மேனகா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி,  பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர்,
பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேனகா, "சோனியாகாந்தி இந்த  நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்தபோது சீதனமாக எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்டுதான் வந்தார்.

அவர் மீது இந்திய மக்கள் அனைவரும் அன்பு மழை பொழிந்தனர். சோனியாஅதற்கு ஏற்ப நடந்து கொண்டாரா என்றால் இல்லை.இன்று உலகப் பெண்மணிகளில் 6-வது பணக்காரராக சோனியா உள்ளார் என்று பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு இவ்வளவு பணம்  எப்படி வந்தது?

நாட்டின் மின் திட்டங்கள், சாலை திட்டங்கள், கல்வித் திட்டங்களில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. எதிர் கால நமது சந்ததிகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது. காங்கிரசார்  ஆங்கிலேயர்களை விட 100 மடங்குக்கு  இந்த நாட்டில் ஊழல் செய்து சுரண்டியுள்ளனர்" என்றார்.

ad

ad