புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014


யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேரூந்தில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.
இன்று காலை குறித்த பேரூந்தில் பயணித்த இரு பெண்கள் தமக்கு அருகிலிருந்த பெண்ணிடம் கதை கொடுத்துள்ளனர்.

அப்பெண்ணும் அவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த சமயம் பார்த்து, இரு பெண்களும் அப்பெண்ணின் கைப்பையிலிருந்த 9800 ரூபா பணத்தை மிக சாதுரியமாக திருடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த அப் பெண் பயணச்சிட்டைக்காக தனது கைப்பையிலிருந்து பணம் எடுக்க முற்பட்டபோது பணம் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.
பணத்தை திருடியவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டவேளை. குறித்த பெண், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது திருடி பணத்தை மீள கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பணத்தை திருடிய இரு பெண்களையும் மற்றைய பெண்ணையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad