புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!

வவுனியாவில் காணாமல் போன நிலையில் மாங்குளம் பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட ஆசிரியர் நிரூபனின் கொலையைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அதனை குழப்பியடிக்க நடந்த முயற்சிகள் பிசுபிசுத்துப்போயுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை யாழ்.பேருந்து நிலையப் பகுதியில் “ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்து கொண்டார்” என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்றும் பெரும் எண்ணிக்கையில் அடையாளம் தெரியாதோரால் வீசப்பட்டிருந்தது. சம்பவத்தை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தத் துண்டுப்பிரசுரங்களைக் கைப்பற்றி அது பொய் எனவும் திட்டமிட்ட நடவடிக்கை எனவும் எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதியில் அவற்றுக்குத் தீயிட்டுக் கொழுத்தி உண்மையினை அம்பலப்படுத்தியிருந்தனர்.

யாழ்.கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் நிரூபன் கடந்த வருடம் செப்ரம்பர் 19ஆம் திகதி காணாமல் போன நிலையில் இந்த வருடம் மார்ச் 12ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்றில் எலும்புக் கூடு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாள் நிரூபனின் சகோதரி இந்த எச்சம் தனது சகோதரனுடையது என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்தச் சம்பவங்களின் தொடராக நிரூபன் காணாமல் போனமை, சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் உடைகளில் கறுப்புப்பட்டி அணிந்து திரண்ட ஆசிரியர்கள் கண்டனக் கோசங்களை எழுப்பினர், “ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி!”, “ஆசிரியர் நிரூபனை ஏன் கொன்றாய்?”, “ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி”, “நிரூபனின் கொலைக்கு விசாரணை எங்கே?”, “நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே”, “இலங்கை எலும்புக்கூடுகளின் நாடா?” , “அரசே! ஆசிரியர் நிரூபனின் எலும்புக்கூட்டுக்கு பதில் கூறு” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ad

ad