-
29 ஜூலை, 2015
விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முறை -இலங்கை
-
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
இலங்கை அரசியலமைப்பின் 99(6) (அ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய, ஒரு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1/20 க்கு (5%) குறைவான வாக்குகளைப் பெறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்கிறார் : தேர்தல் ஆணையாளர்
தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும் மெத்தப்பாடு படுகிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் ததேகூ வேட்பாளர் சுமந்திரன் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் குழுவும் புலம்பெயர்ந்த தமிழர்களில்
யாழ்.இந்திய துணைத்தூதரகம் அப்துல் கலாமுக்கு அஞ்சலி : அரைக்கம்மபத்தில் இந்திய தேசிய கொடி
மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாமிற்கு யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் உருவாக்கப்படும்- ஜனாதிபதி
வடகிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும், யுத்தம் நிறைவடையும் காலப்பகுதிகளிலும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும்.
அந்த செயலகம் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு செயலமாக இருக்கும். சமகாலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி செயலகத்தை உடனடியாக உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் என்னை தொடர்பு கொள்ளும் வகையில் மேற்படிச் செயலகம் உருவாக்கப்படும்.
மேற்கண்டவாறு நேற்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாணசபை உறுப்பினரும், நாடாளுமன்ற வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனுடைய இல்லத்தில் காணாமல்போனவர்களின் பெற்றோர், உறவினர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் அனுபவிக்கும் மன துன்பங்கள் மற்றும் சிக்கல்களை நான் அறிகிறேன். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரும் எனக்கு தெரியும்,
ஜனாதிபதியான பின்னரும், அது எனக்கு தெரியும். ஜனாதிபதியான பின்னர் நான் இந்த விடயம் தொடர்பாக தேடிப் பார்த்தேன்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கையினை எமக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டிருக்கிறோம்.
மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பான உண்ன்மை நிலையினை கண்டறிவதற்கு தனியான செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
ஆனாலும் அதனை உடனடியாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால் இப்போது அதனை உருவாக்குவதனால் பல சிக்கல்கள், உருவாகும்.
எனவே நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அந்த செயலகத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த செயலகம் என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்பதுடன் இதற்காக விசேடமான உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், இலங்கையின் மற்றய பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் தங்கள் முறைப்பாடுகளை என்னுடைய கவனத்திற்கு எழுத்துமூலமாக கொண்டுவர முடியும்.
மேலும் விசாரணைக்கான குழு ஒன்றையும் இந்த செயலகத்தின் கீழ் உருவாக்குவோம்.
இதேபோன்று புதைகுழிகள் மற்றும் இரகசிய முகாம்கள் இருப்பது தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவாருங்கள். அதன் ஊடாக உங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கி அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வுகள் நடத்தப்படும்.
இதற்குமேல் உங்களுடைய பிள்ளைகள் எனக்கும் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகளின் வயதில் எனக்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு உங்களுடைய பிள்ளைகள் தொடர்பாக நிச்சயமாக பதிலளிப்பேன் என ஜனாதிபதி ஆறுதல் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து சிங்கள ராவய அமைப்பினால் முறைப்பாடு
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று
வெளியிட்டது சனல் 4 கசிந்தது ஐ.நா ஆவணம்.
ஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை
இலங்கையின் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்திய அனைத்துலக மனித உரிமை நிபுணர்!
உரிமைகளை வென்றெடுக்க கூட்டமைப்புடன் அணி திரளுங்கள்: மாவை சேனாதிராஜா
60 ஆண்டு காலமாக உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ் மக்களின் இலட்சிய வேட்கை இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. அந்த இலட்சியத்தை அடைவதற்கு தமிழ்த்
தமிழகத்தில் நாளை மறுநாள் அரசு விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வியாழக்கிழமை காலை அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்
மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து
நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம் நடிகர் சங்கத் தேர்தலை 2 மாதத்துக்குள் நடத்த ஐகோர்ட்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்
துருக்கியின் கோரிக்கையை ஏற்று நேட்டோ இன்று அவசர கூட்டம்
துருக்கியின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேட்டோ அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.
வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டத்திற்காக யாழ்.மாவட்டத்திற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
யாழ். மாவட்டத்திற்கு இம்முறை வாழ்வின் எழுச்சி முதலீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கென நாற்பது மில்லியன் ரூபாய் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
யாழ்.மாவட்ட செயலக மடல் நாளை வெளியீடு
யாழ். மாவட்ட செயலகத்தின் இவ்வருடத்திற்கான முதலாவது செயலக மடல் நாளை வெளியிடப்படவுள்ளது.
யாழில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு
வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் வடமாகாண பனை அபிவிருத்தி ஆய்வரங்கு ஒன்று இடம்பெற்றது.
கலாசாரத்தை மீறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
ராஜித, அர்ஜுன, ஹிருணிகா உள்ளிட்ட 5 பேரை சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கினார் மைத்திரி
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிடும், நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட
காணாமல் போன இலங்கை மாணவி சென்னையில்
இந்தியாவின் கர்நாடக பிராந்தியத்தில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த மாணவி சென்னையில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
28 ஜூலை, 2015
த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ் தேசி யக் கூட்ட மைப் பின் தேர் தல் விஞ்ஞா பனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங் களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து
வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கு நிகர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் : மகிந்தவின் தரப்பு கடுமையாக சாடல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமானது 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு
சுவரொட்டிகளை அகற்றும் பொலிஸார்
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனால் தேர்தல் விதிமுறைகளை மீ
எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா; காணாமல் போனவர்களது உறவுகள் யாழில் போராட்டம்
காணாமல் போனவர்களது உறவுகள் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நல்லூர் ஆலய முன்றலில் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தால், மீண்டும் எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றுவார்?
மஹிந்த ராஜபக்ச உட்பட குழுவினர் மிக இரகசியமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோஷித்த ராஜபக்ச,முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிகாரி அநுர சேனாநாயக்க கைது செய்யப்படுவார்கள்
இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் யோஷித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்
இலங்கை ஐ.எஸ். தீவிரவாதியின் குடும்பத்தினர் துருக்கியில் இருந்து ஈராக்கிற்கு தப்பியோட்டம்
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து போராடிய இலங்கை தீவிரவாதியின் குடும்பத்தினர் ஈராக்கிற்கு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று விசேட உரையாற்றும் சந்திரிக்கா! பல விடயங்களை அம்பலப்படுத்துவார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூல வழக்கு 30–ந் தேதிக்கு ஒத்திவைப்பு
2–ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. மற்றும் சில முக்கிய நிறுவனங்களின்
அப்துல்கலாமின் இறுதி சடங்கு ராமேசுவரத்தில் நடைபெறும் மத்திய அரசு வட்டார தகவல்கள்
அப்துல்கலாம் மறைவை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமேசுவரம் சோகத்தில் மூழ்கியது.
இந்திய தேசமே சோகத்தில் ஆழ்ந்தது:
அப்துல் கலாம் மறைவுக்கு மோடி, பிரணாப், ஜெயலலிதா உட்பட தலைவர்கள் இரங்கல்
இளைஞர்களின் விடிவெள்ளி அப்துல் கலாம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீது அன்சாரி,
பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் ( வயது 84 ) மேகாலயாவில் காலமானார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)