போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் அதிகளவு படையினரை நிலைநிறுத்தியுள்ளதும் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் தலையீடுகள் இருப்பதும் சர்வதேச அளவில் இலங்கைக்கு கடும் நெருக்கடியான விவகாரமாகி வருகிறது.
போர் முடிந்த பின்னர் கணிசமானளவு படையினரை வடக்கில் இருந்து குறைத்து விட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் அதேவேளை இனிமேலும் படைக்குறைப்பை மேற்கொள்ளத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.