புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: புஜாரா மீண்டும் சதம்
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் காம்பீர் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோல் சச்சின் (8 ரன்), கோலி (19 ரன்), யுவராஜ் (0), டோனி (29 ரன்) ஆகியோரும் களத்தில் நீடிக்கவில்லை.
 
அதேசமயம் 3-வது வீரராக களமிறங்கிய புஜாரா சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதானமாக, அதேசமயத்தில் அடிக்க வேண்டிய பந்தை அடித்த அவர், 81-வது ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்து சதம் கடந்தார். 248 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அவர் இந்த இலக்கை எட்டினார். ஏற்கனவே, அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போதும் புஜாரா 206 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய டெஸ்ட் அணிக்கு தூணாக இருந்த ராகுல் டிராவிட் 3-வது வீரராக களமிறங்கி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர் ஓய்வு பெற்றபிறகு அந்த இடத்தில் நிரந்தர வீரராக இடம்பெறும் வீரர் அடையாளம் காணப்படாமல் இருந்தது. தற்போது அந்த இடத்திற்கு புஜாரா பொருத்தமானவர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ad

ad