புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012

நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது
ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவின் விசேட விமானமொன்றின் மூலம் விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் பொரும்பாலும் தென் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களாவர். இவர்களை தேசிய குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இவ்வாறு கடந்த ஒன்பது தடவைகளாக 526 புகலிடக்கோரிக்கையாளர்கள் தாய்நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad