புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2012


ஆபாச நடிகை கொடூர கொலை!
உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாடு, கால்பந்து போட்டிகளுக்கு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உலகப் புகழ்பெற்ற பல வீரர்கள் உருவெடுத்துள்ளனர். அவர்களில் புருனோ பெர்னான்டஸ் என்பவரும் ஒருவர். இவர் அந்நாட்டில் புகழ்பெற்ற

பிளம்மிங்கோ அணியில் கோல் கீப்பராக உள்ளார். அடுத்ததாக இத்தா- நாட்டின் ஏ.சி.மிலான் என்ற அணியும் இவரை பலகோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் கொலைவழக்கு ஒன்றில் புருனோ பெர்னான்டஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச நடிகை ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நடிகையின் பெயர் சமுடியோ (25). பல ஆபாசப் படங்களில் நடித்துள்ள இவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. 
2009ம் ஆண்டு புருனோ பெர்னான்டசுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார் சமுடியோ. இவர்களது நட்பு காதலாக மாறியது. இதனால் சமுடியோ கர்ப்பம் ஆனார். இதனை புருனோ விரும்பவில்லை. கருவைக் கலைக்க வற்புறுத்தினார். அதற்கு நடிகை சமுடியோ சம்மதிக்கவில்லை. அவருக்கு 2010ம் ஆண்டு பிப்ரவரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தந்தை புருனோபெர்னான்டஸ் தான் என்று கூறினார். இதை புருனோ ஏற்றுக்கொள்ளவில்லை. 
சமுடியோவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உண்டு என்பதால் அந்த குழந்தைக்கு தான் தந்தை என்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்போவதாக சமுடியோ எச்சரித்தார். 
இந்தநிலையில் 2010ஆம் ஆண்டு சமுடியோ காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரை புருனோ தான் ஆட்களை வைத்து கடத்தி கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்தது.
சமுடியோவை முன்னாள் ராணுவ வீரர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த ராணுவ வீரர் 6 நாட்கள் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்து பின்னர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இந்த கொலைக்காக அந்த ராணுவ வீரருக்கு, புருனோ 8 ஆயிரம் பவுண்ட் (ரூபாய் 6.50 லட்சம்) தொகையை கொடுத்துள்ளார்.பின்னர் சமுடியோவின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். சில உறுப்புகளை அவரது நாய்க்கு இரையாக போட்டுள்ளார். மீதிபகுதிகளை வீட்டிலேயே கான்கிரிட் சுவருக்குள் புதைத்து விட்டார். அவர் முது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ad

ad