புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2012


கடைசி ஆசை என்று எதுவும் இல்லை: அஜ்மல் கசாப்

 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் முன்பு அவனது கடைசி ஆசை குறித்து கேட்டதற்கு அப்படி எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளான். 26/11 தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததார். இதையடுத்து கசாபை தூக்கிலிட கடந்த 8ம் தேதி முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடுவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை தூக்கிலிடப் போகும் முன்பு கசாபிடம் அவனுடைய கடைசி ஆசை என்னவென்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு அவன் தனக்கு கடைசி ஆசை என்று எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளான். கசாபின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து அவன் ஜனாதிபதியிடம் கருணை மனுவை கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அளித்தான் என்பது குறிப்பிடத்தக்கது
.

ad

ad