பலர் வங்கிகளில் லட்சக்கணக்கான சுவிஸ் பிறங்குகளை, ஈரோக்களை கடனாக பெற்றுக்கொடுத்தனர். மே 17, 18ஆம் திகதிகளில் கூட ஆயுதம் வாங்குவதற்கென சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதிகள் யாருக்கு ஆயுதம் வாங்குவதற்கு எங்கு சென்றது என்ற விபரம் யாருக்கும் தெரியாது. இந்த கேள்விகளை கேட்பவர்கள் துரோகியாக்கப்பட்டு விடுவார்கள்.
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்
புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல- இரா.துரைரத்தினம-Thanks-THINAKATHIR
கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.