புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2012


சின்மயி எடுத்த நடவடிக்கைகள்-சரியானவை: நடிகை குஷ்பு
பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார், அதில், டுவிட்டரில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் தொந்தரவு செய்கின்றனர், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மனுவில்
குறிப்பிட்டு இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


சின்மயிக்கு தொந்தரவு கொடுத்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். தன்னைப் போல் பாதிக்கப்படும் பெண்கள் துணி
ச்சலாக போலீசில் புகார் செய்ய முன் வர வேண்டும் என்று சின்மயி கூறியுள்ளார். 

அவருக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்த நினைக்கும் தரம் கெட்ட மனிதர்கள் அப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும். சின்மயி எடுத்த நடவடிக்கைகள் சரியானவை என்று குஷ்பு டுவிட்டரில் கூறியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் கூறும்போது, இன்டர்நெட் மூலம் பெண்களை இழிவு செய்பவர்கள் மீது போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. சின்மயி துணிச்சலாக செயல்பட்டு உள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ad

ad