புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2012


புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றது இலங்கை குழு!
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு ஒன்று லண்டன் சென்றுள்ளது.
நேற்றைய தினம் இந்த குழு இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணாண்டோ மற்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் தலைமையில் இந்த குழு அங்கு சென்றுள்ளது.
லண்டனில் முக்கிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளை சந்தித்து, இலங்கைக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தாங்கள் அங்கு செல்வதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடமும் இவ்வாறான குழு ஒன்று அங்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad