புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 அக்., 2012


திருமாவளவனுக்கு 90 சவரன் பரிசளிப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு தங்க காசுகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில வணிகரணி துணை செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ஏற்புரையாற்றினர். கூட்டத்தில் அவர் பேசியதாவது: காந்தியடிகளின் முக்கிய கொள்கையான மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். 

மதுக்கடைகளை அரசே நடத்துவதை தடுக்க வேண்டும். வரும் 2013ம் ஆண்டு முழுமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுவுக்கு எதிரான செயல்திட்டங்களை தீட்டி விழிப்புணர்வு கூட்டம், பிரசார பயணம், கலை நிகழ்ச்சிகள், நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் கடுமை யான மின்வெட்டு காரண மாக தொழில்கள் நசிந்து வருகின்றன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்திற்கு கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, தெற்காசிய நாடுகள் அனைத்திற்கும் பயன் அளிக்க கூடிய திட்டமாகும். மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட கட்சிகளுக்கு தனியாக கட்சி அலுவலகங்கள், ஊடகங்கள் உள்ளதைப்போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் வேண்டும் என்பதற்காக இந்த விழா நடக்கிறது. பொற்காசுகள் எனக்கு அல்ல, கட்சிக்கு தான்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார். விழாவில் அவருக்கு 90 சவரன் எடை கொண்ட பொற்காசுகள் வழங்கப்பட்டது.

ad

ad