யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகுகநேசனுக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை
யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீகுகநேசன் இன்று வியாழக்கிழமை ஓய்வுபெறுவதையிட்டு, யாழ். பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும் கௌரவிப்பும் நடைபெற்றது.
யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன் 37 வருடகால கடமையை நிறைவுசெய்துள்ளார்.
யாழ். மாவட்ட பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேராவின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
இவ்வணி வகுப்பு மரியாதையில் யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹேரா, உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.